ஆந்திரா, தெலுங்கானா மாநி லங்களில் புதன்கிழமை காலை திடீரென நிலநடுக்கம் ஏற் பட்டது. தெலுங்கானா மாநிலம் முலுகுவில் புதன்கிழமை காலை 7:30 மணியளவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற் பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக் கத்தால் கட்டிடங்கள் லேசான அளவில் குலுங்கியதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.
எனினும் பெரியளவில் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. முலுகுக்கு அருகிலுள்ள வாரங்கல் நகர மக்களும் காலை 7.30 மணியள வில் நிலநடுக்கம் காரணமாக சில வினாடி களுக்கு அசாதாரணமான நிலையை அனு பவித்ததாகக் கூறியுள்ளனர். இதுபோல ஆந்திரா மாநிலம் பத்ராசலம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட தாக செய்திகள் வெளியாகியுள்ளன.