தெலுங்கானா மாநிலம் கச்சிபள்ளி யில் பாஜக வேட்பாளராக 2018 அன்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டவர் கஜ்ஜால யோகானந்த். இவருக்கு சொந்தமாக செரிலிங்கம்பள்ளி யில் உணவகம் ஒன்று உள்ளது. இந்த உண வகத்தில் யோகானந்தின் மகன் விவேகா னந்த் 3 நாட்களாக தொடர்ந்து விருந்து வைத்துள்ளார்.
விருந்தில் போதை மருந்து பயன் படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, போலீசார் விசா ரணை மேற்கொண்டனர். இதில் சையது அப்பாஸ் ஜாப்ரி என்பவரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கி பயன்படுத்திய தாக பாஜக தலைவர் யோகானந்தின் மகன் விவேகானந்த் ஒப்புக்கொண்டார். இது வரை விவேகானந்த் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பாஜக தலை வர் உணவகத்தில் போதை பொருள் பயன் படுத்தியது மாநிலத்தில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.