புதுதில்லி, மார்ச் 9- ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை கடத்திய குற்றச் சாட்டில், தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தில்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் மேற்கு தில்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த சில தினங்க ளுக்கு முன்பு நடத்திய சோதனையின் போது போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான 50 கிலோ ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தமிழ கத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய் யப்பட்டனர். மேலும் மூளையாகச் செயல்பட்ட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கை விசாரிக்க முயன்ற போது அவர் தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில் ஜாபர் சாதிக்கின் இருப்பிடத்தை தமிழக போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் கண்டறிந்ததாக தெரிகிறது. இதையடுத்து தமிழக அதிகாரிகளின் தகவலை அடுத்து தில்லி என்சிபி (போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள்) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை வெள்ளி யன்று இரவு கைது செய்தனர்.