பிறந்ததிலிருந்து ஊனமுற்ற என்னை எனது தாய் தோளில் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடம் அழைத்துச் செல்வார். நான் கல்வி பெற வேண்டும் என்பது மட்டும்தான் அவரது கனவாக இருந்தது. நான் சிறையில் இருந்த போது என் அம்மா இறந்துவிட்டார். எனக்கு தொடர்ந்து பரோல் மறுக்கப்பட்டது. கடைசி வரை எனது தாயை ஒருமுறை கூட பார்க்க முடியவில்லை.