india

img

தண்ணீர் கோரி 3ஆவது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் தில்லி பெண் அமைச்சர்

பாஜக ஆளும் ஹரி யானா மாநில அர சிடம் மறைமுகமாக உத்தரவிட்டு “இந்தியா” கூட்ட ணியில் அங்கம் வகிக்கும் ஆம்  ஆத்மி கட்சி ஆளும் தில்லி மாநி லத்தில் கடும் தண்ணீர் பஞ்சத்தை உருவாக்கியுள்ளது மோடி அரசு. இந்த பழிவாங்கல் நட வடிக்கை காரணமாக தில்லி மக்  களின் இயல்பு வாழ்க்கை முடங்கி  யுள்ள நிலையில், தண்ணீர் பிரச் சனையை தீர்க்கக் கோரியும், அவ்வாறு தீர்க்கவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக பிரதமர்  மோடிக்கு தில்லி நீர்வளத்துறை  அமைச்சர் அதிஷி கடிதம் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.  இந்த கடிதத்திற்கு பிரதமர் மோடி  எவ்வித விளக்கமும் அளிக்காத நிலையில், அறிவித்தது போலவே தில்லியில் அமைச்சர் அதிஷி  வெள்ளியன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட் டத்தை தொடங்கினார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக  தொடர்ந்து நடைபெற்று வரும்  நிலையில், தில்லிக்கு தண்ணீர்  திறக்கப் பயன்படும் ஹத்னி குண்ட் தடுப்பணையின் அனைத்  துக் மதகுகளையும் ஹரியானா பாஜக அரசு மூடிவிட்டதாகவும், அதனால் உண்ணாவிரதப்  போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் தில்லி அமைச்சர் அதிஷி ஞாயிறன்று அறிவித்தார்.

இதுகுறித்து டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அதிஷி வெளியிட்ட வீடியோவில்,”நான் தில்லிக் கான தண்ணீரைப் பெற உண் ணாவிரதம் இருக்கிறேன். ஆனால் பாஜக ஆளும் ஹரி யானா அரசு 100 எம்ஜிடி என்ற அளவில் குறைவான அளவில் தண்ணீரை தருகிறது. இது தில்லி மக்களின் குடிநீர் பிரச்ச னையை தீர்க்க வாய்ப்பில்லை. 100 எம்ஜிடி நீர் வழங்கினாலும் 28 லட்சம் மக்கள் தண்ணீர் இன்றி  அல்லாடுகின்றனர். குறிப்பாக ஹத்னிகுண்ட் தடுப்பணையில் தண்ணீர் நிரம்பியுள்ள பொழு திலும், தடுப்பணையின் நீர்  தேசிய தலைநகருக்கு வரு வதை தடுக்க ஹரியானா அரசு  அனைத்து மதகுகளையும் மூடி யுள்ளது. இதனால் தண்ணீர்  கிடைக்கும் வரை உண்ணாவிர தப் போராட்டத்தை தொடரு வேன்” எனக் கூறினார்.

பெண் அமைச்சர் ஒருவர் தனது மாநிலத்திற்காக தண் ணீர் கோரி கடந்த மூன்று நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் சூழலில்  இதனை பிரதமர் மோடி தலை மையிலான ஒன்றிய பாஜக அரசு கண்டுகொள்ளாதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.