மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பயின்ற முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், மாணவியின் மரணத்திற்கு நீதி வழங்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள், வாலிபர் மற்றும் மாதர் சங்கத்தினர் மருத்துவக் கல்லூரி முன்பு 4ஆவது நாளாக தொடர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.