சொன்னது
“உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் வெளிப் பாதுகாப்பில் அறிவுப்பூர்வமான அணுகுமுறையின் மூலம் இந்தியாவின் சர்வதேச அந்தஸ்தை உயர்த்துவோம்.”
“ராணுவ தளவாடங்களை மேக் இன் இந்தியா திட்டம் மூலம் உள்நாட்டிலேயே தயாரிப்போம்.”
- பாஜக 2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை
உண்மை நடப்பு
l தேசப் பாதுகாப்பு என்பது ராணுவப் பாதுகாப்பு என்பதைத் தாண்டி விரிவான கொள்கைகளைக் கொண்டது. பொருத்தமான வெளிநாட்டு உறவுகள், நாட்டின் முக்கியத் துறைகளில் முழுமையான தேசப் பாதுகாப்பு, சுயசார்பு - இவற்றையெல்லாம் உள்ளடக்கியதே தேசப் பாதுகாப்பு என்பதாகும். இவை எல்லாம் இணையாத வரையில், தேசத்தின் முழுமையான பாதுகாப்பை ராணுவத்தால் மட்டுமே உறுதி செய்து விடமுடியாது.ஆயுதங்கள் தயாரிப்புத் திட்டத்தின் தோல்வியும், தவறான ஆத்ம நிர்பார் திட்டமும்
l பாஜக அரசு முக்கியத்துவம் மிக்க ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில், பொதுத் துறையில் உள்ள ஆயுதத் தொழிற்சாலைகளை பலப்படுத்துவதற்கு மாறாக ஆயுதத் தயாரிப்பில் தனியார்மயக் கொள்கைகளை செயல்படுத்தியது.
l 74 சதவீத அந்நிய நேரடி முதலீடும், சில பகுதிகளில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடும் அனுமதிக்கப்பட்டது.
l கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் ஆயுதத் தொழிற் சாலைகளில், அந்நிய நாடுகளைச் சேர்ந்த ஆயுதத் தயாரிப்பு நிறுனங்களுடன் இணைந்து, இந்திய தனியார் துறையும் சேர்ந்து செயல்படுவதற்கான புதிய கொள்கையை பாஜக அரசு அறிமுகப்படுத்தியது. அந்நிய நேரடி முதலீடு மற்றும் தனியார் துறைகளின் மீதும் பாஜக அரசு நம்பிக்கை வைத்தது பொய்யாகிப் போனது. இந்தத் தவறான நம்பிக்கையால் பாதுகாப்புத் துறையில் நமது நாடு பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆயுதங்களை வாங்குவதற்கு இந்தியா மிகப்பெரிய தொகையை செலவழிக்க வேண்டியதாகிவிட்டது.
l வேறுவழியில்லாமல் இன்று ,DRDO, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட், பொதுத்துறையில் உள்ள கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் பாதுகாப்புத்துறையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் தான் பெரும்பாலான உபகரணங்களும் ஆயுதங்களும் தயாரிக்கப்படுகின்றன என்பது நகைமுரணாகும்.படைகளைப் பலவீனப்படுத்திய மோடி அரசு
l முப்படைகளில், முடிவெடுக்கும் அதிகாரம் மென்மேலும் அரசியல் தலைமையில் உள்ளவர்களின் கைகளில் குவிக்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளை உருவாக்கும்.
l ராணுவத்தினரின் மன உறுதியை குலைக்கும் வகையில், ராணுவ அமைப்புகளுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அக்னிப்பாதை திட்டத்தை முப்படைகளின் சில தளபதிகளை, மூத்த அதிகாரிகளை, நிபுணர்களை, ராணுவத்தில் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர்களை கலந்தாலோசிக்காமலேயே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் முறையாக பயிற்சி அளிக்கப்பட்ட வீரர்களின் மொத்த எண்ணிக்கையில் 25 சதவீத அளவுக்கு குறைத்து விடும்.
l ராணுவத்தை ‘தேசியமயப்படுத்துதல்’ எனும் பாஜக அரசின் நடவடிக்கைகள் ராணுவத்தில் கலாச்சார பக்கச் சார்புகள், பாராபட்சங்களை உருவாக்கி விடும். வகுப்பு
வாத, பிரிவினைவாத உணர்வுகளை பரப்பக்கூடும். படைகளின் வழமையான பாரம்பரியத்தை பெரிதும் பாதித்து எண்ணிப் பார்க்க முடியாத விளைவுகளை உருவாக்கி விடும்.வடகிழக்கு மாநிலங்களைச் சீர்குலைத்த பாஜக அரசு
l வங்கதேசம், மியான்மர் நாடுகளுடன் பதற்றமிக்க எல்லைகளைக் கொண்ட வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தையுமே பாஜக அரசு கிட்டத்தட்ட சீர்குலைத்துவிட்டது.
l மணிப்பூரில், பாஜகவின் சூழ்ச்சிகரமான -வகுப்புவாதச் செயல்பாடுகள் மாநிலக் காவல் துறையினருக்கும், துணை இராணுவப் படையினருக்கும் இடையில் மோசமான பிரிவினையை உருவாக்கி விட்டது.
l பாஜகவின் இனவெறிக் கொள்கைகள் வடகிழக்கு மாநிலங்களின் பெரும் பகுதி மக்களை அந்நியப்படுத்தி விட்டது. பாஜக ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறையால் வடகிழக்கு மாநிலங்களின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
l குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை செயல்படுத்துவதற்காக மியான்மர் எல்லையில் முள்வேலி அமைக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. இதனால் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.ஜம்மு - காஷ்மீரைச் சீர்குலைத்த அரசு
l ஒன்றிய அரசின் நேரடி ஆட்சி திணிக்கப்பட்டுள்ள ஜம்மு - காஷ்மீரில், ராணுவத்தின் ஒடுக்கு முறை நடவடிக்கைகளால் மக்கள் மனக் கொதிப்புடன் உள்ளனர். ஒன்றிய அரசின் பிரதிநிதியான லெப்டினன்ட் ஆளுநர் லே பள்ளத்தாக்கு மற்றும் கார்கில் பகுதிகளில் அந்நிய மாநிலத்தவருக்கு தாராளமாக உரிமைகளை வழங்குகிறார். இதுவரையில் காஷ்மீர் மக்கள் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்த
தமது கலாச்சாரம், சுயாட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கருதுகின்றனர்.மோசமடையும் உறவுகள்
l இப்போது அண்டை நாடுகளில் இந்தியாவுக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை. பாஜக ஆட்சியில் இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான உறவுகள் மிகவும் மோசம் அடைந்துள்ளன. சமீபத்தில் ,மாலத்தீவு கூட எதிரியாக மாறிவிட்டது. மோடி அரசின் முரட்டுத்தனமான வெளியுறவுக் கொள்கையால் அண்டை நாடுகளுடனான நட்புறவும், நாட்டின் பாதுகாப்பும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.தெற்குலக நாடுகளுடனான உறவுகள்
l ஒரு சில வர்த்தக ஒப்பந்தங்களைத் தவிர, தெற்குலக நாடுகளான லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கிழக்காசியா,ஏன் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவுகளில் கூட பெரிய முன்னேற்றங்கள் இல்லை. அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளிடம் மோடி அரசு நெருக்கமான உறவைக் கொண்டுள்ளதால், இந்தியா நட்புறவு நாடு எனும் நம்பகத் தன்மையை தெற்குலக நாடுகள் சந்தேகிக்கின்றன. விளைவாக, நமது நாட்டின் தேசப் பாதுகாப்பு நலன்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட் டுள்ளன.
நாட்டின் பாதுகாப்பை பாதுகாப்போம்!
பாஜகவைத் தோற்கடிப்போம்!
தமிழில்: ம.கதிரேசன்