india

img

பஞ்சாப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு கொரோனா

பஞ்சாப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா 2வது அலையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா பரவல் குறித்து சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் பஞ்சாப்பில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பள்ளிகள் கடந்த 2 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு ஆர்வமுடன் வருகை புரிந்தனர்.

இந்நிலையில், பஞ்சாப்பில் பள்ளிகள் திறக்கப்பட்ட இரண்டாவது வாரத்தில், லுதியானாவில் உள்ள 2 அரசுப் பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதிசெய்யப்பட்ட அந்த 2 பள்ளிகள்  ஆகஸ்ட் 24 வரை மூடப்பட்டுள்ளன. மற்ற பள்ளிகள் வழக்கம்போல் செயல்படுகின்றன. 

மாணவர்களிடையே தொற்று பரவுவதைக் கண்காணிப்பதற்காக மாநில சுகாதாரத்துறை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளிலிருந்து தினமும் பத்தாயிரம் பரிசோதனைகளை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.

 

;