புதுதில்லி
கெஜ்ரிவாலுக்கு தொடரும் நெருக்கடி
வீடு முன்பு குற்றப்பிரிவு போலீஸ் குவிப்பு
“இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபான கலால் கொள்கை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மூலம் கைது செய்ய துடியாய்த் துடித்து வரு கிறது மோடி அரசு. பிப்.2-ஆம் தேதி ஆஜராக வேண்டிய அமலாக்கத்துறை யின் 5-ஆவது சம்மனையும் கெஜ்ரிவால் புறக்கணித்த நிலையில், அவர் எந்த நேரத் திலும் கைது செய்யப்படலாம் என அம லாக்கத்துறை மூலம் தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், மேலும் ஒரு பிரச்சனை மூலம் கெஜ்ரிவாலுக்கு பாஜக நெருக்கடி அளித்து வருகிறது.
கடந்த வாரம் கெஜ்ரிவால், தில்லியில் ஆட்சியை கவிழ்க்க ஆம் ஆத்மி எம்எல்ஏ களுக்கு ரூ.25 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவாலுக்கு வெள்ளியன்று தில்லி குற்றப்பிரிவு போலீ சார் நோட்டீஸ் அனுப்பினர். தொடர்ந்து சனியன்று முதல்வர் அலுவலகத்திற்கு தில்லி குற்றப் பிரிவு போலீஸ் அதிகாரி கள் சென்று ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, கெஜ்ரி வாலிடம் ஆதாரங்களை சேகரிக்க வந்த தாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் கெஜ்ரிவாலின் வீட்டின் முன் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
சண்டிகர்
பஞ்சாப் ஆளுநர்
திடீர் ராஜினாமா
நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு வந்த பின்பு பாஜக ஆளும் மாநி லங்களில் ஆளுநர்கள் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளார்கள். ஆனால் பாஜக ஆளாத மாநிலங்களில் அதற்கு நேர்மாறாக சர்ச்சைக்குரிய வகையில் ஆளுநர்கள் சுழன்று வருகிறார்கள். அதா வது ஆட்சிக்கு எதிராக நடந்து கொள்வது, மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது என மக்கள் பணி யை மேற்கொள்ள விடாமல் திணற டிப்பதே ஆளுநரின் வேலையாக உள் ளது. இந்நிலையில், “இந்தியா” கூட்டணி யில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநில அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்த அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோ கித் (84) திடீரென தனது பதவியை ராஜி னாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மேலும் அதற்கான கடிதத்தை குடியர சுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பன் வாரிலால் அனுப்பியுள்ள நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவி யை ராஜினாமா செய்வதாக அவர் அறி வித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் குட்டு காரணமா?
பஞ்சாப் அரசு இயற்றிய மசோதா விற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார். இதனால் பஞ்சாப் அரசு உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி, ஆளுநர் பன்வாரிலா லுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதன் காரணமாகவே அவர் ராஜினாமா செய்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்பி யான பன்வாரிலால் அசாம், மேகா லயா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் தலைமை நிர்வாகியாகவும் பணியாற்றி யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை
நடிகை பூனம் பாண்டேவுக்கு வலுக்கும் கண்டனம்
இந்தி திரையுலகின் முன்னணி நடி கையான பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் வியாழனன்று நள்ளிரவு உயிரிழந்ததாக வெள்ளியன்று தலைப்புச் செய்தியாக வெளியாகியது.
இந்நிலையில், தான் உயிருடன் இருப் பதாக சனியன்று பூனம் பாண்டேவே வீடியோ வெளியிட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அந்த வீடியோவில், “நான் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறந்துவிட்டேன் என்று சொன்னது மிகப் பெரிய தவறுதான். விழிப்புணர்வை ஏற் படுத்தவே அவ்வாறு செய்தேன்” என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
விழிப்புணர்வு நல்லதுதான் என்றா லும், அதை எப்படி கையாள வேண்டும் என்பதை பூனம் பாண்டே முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். பூனம் பாண்டேவின் செயல் திரைப்படக் காட்சி அல்ல, அவரது செயலால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பதற்றம் மற்றும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் என அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் தட்டி கொண்டா ராஜய்யா திடீரென கட்சியிலிருந்து ராஜி னாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முன்னாள் ,முதல்வர் சந்திரசேகர ராவின் வலது கரமாக இருந்தவர் தட்டிகொண்டா ராஜய்யா என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தல் நெருங்கிய நிலையில், ஒடிசா மாநிலத்தில் ரூ.68 ஆயிரம் கோடி மதிப்பிலான 18 திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி சனியன்று திறந்து வைத்தார்.
மதுபான கலால் கொள்கை வழக்கு தொடர் பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் வரும் 5-ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கி ரஸ் எம்எல்ஏவின் மெய்க்காப்பாளர் கொல் கத்தாவில் உள்ள எம்எல்ஏ விடுதி வளாகத்தில் மர்ம மான முறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.