india

‘19 ஆயிரம் கிராமங்களில் குடிக்கத் தண்ணீர் இல்லை’

19  ஆயிரம் கிராமங்களில் தண்ணீர் மாசுபட்டுள்ளது. இதில் ஐந்து சத வீத கிராமங்களில் மட்டுமே தற்காலிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சில கிராமங்களுக்கு தற்காலிகமாக தண்ணீர்  வழங்குவதற்கு நிதி வழங்கு வதில் தாமதம் ஏற்படுவதும் பிரதான காரணம் என்பது தெரியவந்துள்ளது.

 நாட்டில் 19,000க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீரே இல்லை. அவர் களுக்கு டேங்கர் தண்ணீர் போன்ற  தற்காலிக வசதிகளை அரசு வழங்க வில்லை என்று நாடாளுமன்றக் குழு அறிக்கை ஒன்றிய அரசின் செயல் பாட்டை அம்பலப்படுத்தியுள்ளது.

சுத்தமான குடிநீர் 
வழங்க தவறிய அரசு

பல கிராமங்களில் நிலத்தடி நீர்  ஆர்சனிக், புளோரைடு, இரும்பு, உப்புத்தன்மை, நைட்ரேட் மற்றும் பிற  கன உலோகங்களால் பாதிக்கப் பட்டுள்ளன. 

ஜல் சக்தி அமைச்சகத்தின்-குடிநீர்  மற்றும் துப்புரவுத் துறை அமைச்ச கத்தின் நிலைக்குழு அறிக்கை, நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களில் நீர் ஆதாரங்கள் மாசு பட்டுள்ளன. குழாய் மூலம் சுத்தமான  தண்ணீர் கிடைக்கும் வரை பாது காப்பான குடிநீர் வழங்குவதற்கு அரசு  தவறிவிட்டது எனக் கூறியுள்ளது.

சில கிராமங்களுக்கு தற்காலிக நடவடிக்கை மூலம் தண்ணீர் வழங்கு வதற்குத் தேவையான  நிதி வழங்கு வதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றொரு காரணி என்கிறது நிலைக்குழு அறிக்கை. 

ஆர்சனிக், ஃப்ளூரைடு ஆகிய வற்றால்  நிலத்தடி நீர் பாதிக்கப் பட்டுள்ள 1,000 கிராமங்களில் நீர் சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவுவது போன்ற சில தற்காலிக முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பகுதிகளில், குடிநீர் மற்றும் சமையல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சுமார் பத்து லிட்டர் மட்டுமே  குடிநீர் வழங்கப்படுகிறது.

முதலிடங்களில் அசாம், இராஜஸ்தான்
டிநீர் ஆதாரங்கள் இரும்பு மற்றும் உப்புத்தன்மையால் மாசுபட்டுள்ளன. இதில் பாஜக ஆளும் அசாம் (6,749)  முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து ஒடிசா (1,118) இரண்டா வது இடத்திலும் திரிபுரா (326), உத்த ரப்பிரதேசம் (209), பீகார் (66) மற்றும் கேரளம் (58) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

நைட்ரேட் மற்றும் உப்புத்தன்மை யால் பாதிக்கப்பட்ட அதிக எண்ணிக்கை யிலான கிராமங்களின் பட்டியலில் பாஜக ஆளும் இராஜஸ்தான் முத லிடத்தில் உள்ளது. மாநிலத்தில் 8,840 கிராமங்கள் உப்புத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 436 கிராமங்கள் நைட்ரேட் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன.

சுமார் ஐந்து சதவீத கிராமங் களுக்கு மட்டுமே டேங்கர்கள் அல்லது நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. ஜல் சக்தி அமைச்சகத்தின்-குடிநீர்  மற்றும் துப்புரவுத் துறை அமைச்ச கத்தின் நிலைக்குழு அறிக்கை, நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களில் நீர் ஆதாரங்கள் மாசு பட்டுள்ளன. குழாய் மூலம் சுத்தமான தண்ணீர் கிடைக்கும் வரை பாது காப்பான குடிநீர் வழங்குவதற்கு அரசு தவறிவிட்டது.  நிலத்தடி நீர் பாதிப்பின் தன்மை, பாதிக்கப்பட்டுள்ள கிராமங்கள், தற்காலிக வசதி பெறும் கிராமங்கள்: