india

அக்னிபாத் திட்டத்திற்கு சிஐடியு எதிர்ப்பு

புதுதில்லி, ஜூன் 16- ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுத்திடும் அக்னிபாத் திட்டத்தை சிஐடியு வும் எதிர்த்திருக்கிறது. இது தொடர்பாக சிஐடியு சார்பில் வெளி யிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்ப தாவது: ஓய்வூதியத்திற்கு வழிவகை எதுவும் செய்யாமல் குறிப்பிட்ட கால அளவிற்கு ஒப் பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆள்  எடுக்கும் ஒன்றிய பாஜக அரசாங்கத்தின் பேர ழிவு சூழ்ச்சித் திட்டம் குறித்து சிஐடியு தன் ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்திக் கொள்கிறது. நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள் கையின் நடைமுறைக்கிணங்க ஏற்கனவே நாட்டின் பல துறைகளில் பின்பற்றப்பட்டு வந்த கேசுவல் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறையை இப்போது ஒன்  றிய அரசாங்கம் ராணுவ வீரர்களை எடுப்பதி லும் பிரயோகிக்க முன் வந்திருக்கிறது.  இதற்கு ‘அக்னிபாத்’ என்று பெயரிட்டிருக்கி றது. இதனால் ஏற்படவிருக்கும் அபாயகர மான விளைவுகள் குறித்து இது கவலைப்பட வில்லை. ‘நம் ஜவான்கள்’ என்று மோடி அடிக்  கடி கூறுவதை கேலிக்கூத்தாக்கும் விதத்தில் இத்திட்டம் வந்திருக்கிறது. இது இவர்களின் போலி தேசியவாதத்தையும், போலி நாட்டுப்  பற்றையும் வெளிப்படுத்துகிறது. இத்தகைய பிற்போக்குத்தனமான நட வடிக்கை நம் ராணுவத்தின் தரம் மற்றும் திறன் முதலானவற்றில் கடும் பாதிப்பை ஏற்படுத் தும். நாட்டின் பாதுகாப்புக்கும் ஆபத்தை விளைவித்திடும்.

மேலும், இவ்வாறு அக்னிபாத் திட்டத் தின்கீழ் ராணுவத்தில் சேர்ந்திடும் இளை ஞர்கள் நான்கு ஆண்டு காலத்திற்குப்பின் அவர்களின் நிச்சயமற்ற எதிர்காலத்துடன் வெளியே தூக்கி எறியப்படுவார்கள். இது சமூ கத்தின் மிகவும் மோசமான அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். நாட்டின் நலன்களுக்கு எதிரான இத்த கைய படுபிற்போக்குத்தனமான திட்டத்தை சிஐ டியு கடுமையாகக் கண்டிக்கிறது. இதற்கெதி ராக நாடு முழுதும் தன்னெழுச்சியாக எழுந்  துள்ள கிளர்ச்சிப் போராட்டங்களை வரவேற்கி றது. ஒன்றிய அரசாங்கம் இந்தத் திட்டத்தினை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று சிஐடியு கோருகிறது. இத்தகைய தேச விரோத சூழ்ச்சித் திட்டங்களுக்கு எதிராக நாட்டுப்பற்றுள்ள மக்கள் அனைவரும் கிளர்ந்தெழுந்து தங்கள் கிளர்ச்சிக் குரலை எழுப்பிட வேண்டும் என்றும் சிஐடியு அனை வரையும் அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு சிஐடியு அறிக்கையில் கூறி யுள்ளது.                      (ந.நி.)