மாநிலங்கள் நடத்தும் போராட் டமே மக்களின் உரிமைக்கா கத்தான். கேரள முதல்வர் பின ராயி விஜயன் நிதியை வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்காக இங்கு வந்து போராட வில்லை. அவர் கேரள மக்களுக்காக போராடுகிறார். 2 கோடி தில்லி மக்களின் உரிமையை கேட்கவே நானும் இங்கு வந்துள்ளேன். நாட்டில் உள்ள 70 கோடி மக்களை எதிர்க்கட்சிகள் பிரதிநிதித்து வப்படுத்துகின்றன. ஆனால் எதிர்க்கட்சி கள் ஆளும் மாநிலங்களுக்கு எதிராக பாஜக போர் தொடுத்து வருகிறது.
மூன்று வழிகளில் துன்புறுத்தல்
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசு களை துன்புறுத்த மூன்று வழிகளை ஒன் றிய அரசு பயன்படுத்துகிறது. ஒன்று மாநி லங்களில் நிதி நெருக்கடியை உருவாக்கு வது, இரண்டு ஆளுநர்கள் மூலம் சிர மங்களுக்கு உள்ளாக்குவது, மூன்றாவ தாக மத்திய அமைப்புகளை அனுப்பி தொந்தரவு செய்வது ஆகும்.
இதே வகையில்தான் நிதியை நிறுத்தி வைத்து கேரளத்தை பெரும் நெருக்க டிக்குள் தள்ள முயற்சிக்கின்றனர். பஞ்சாபி லும் இதே நிலைதான் இருந்தது. இறுதி யில் எந்த பலனும் இல்லாமல் உச்சநீதி மன்றத்தை அணுக வேண்டியதாயிற்று. உச்சநீதிமன்ற உத்தரவில்தான் ஒன்றிய அரசே விவாதத்திற்கு முன்வந்தது.
தலைவர்களை பொய் வழக்குகளில் சிறையில் அடைத்து ஒன்றிய அரசு பழி வாங்குகிறது. தலைவர்கள் முதலில் சிறை யில் அடைக்கப்படுவார்கள். பிறகு என்ன வழக்கு போடுவது என்று முடிவு செய்கி றார்கள். இதே வகையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அம லாக்கத்துறையால் அடைத்து வைக்கப் பட்டு துன்புறுத்தப்படுகிறார். ஹேமந்த் சோரனை போல அமலாக்கத்துறையின் அடுத்த நடவடிக்கைக்கு நான், பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் ஆக கூட இருக்க லாம். பாஜகவுக்கு காலம்தான் பதில் சொல்லும்” என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.