இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜீவ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.
தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராகவுள்ள சுஷில் சந்திரா, மே 14ஆம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளார். இதனைத் தொடர்ந்து, மே 15ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவியேற்கவுள்ளார்.
இந்திய ஆட்சிப் பணியில் 1984ஆம் ஆண்டு பிகார் மாநிலத்தில் சேர்ந்த ராஜீவ் குமார், மத்திய நிதித்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 2020ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார்