india

‘நீட்’ கருணை மதிப்பெண் ரத்து; 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு!

புதுதில்லி, ஜூன் 13 - நீட் தேர்வில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப் படுவதாகவும், சம்பந்தப்பட்ட 1,563 பேருக்கு ஜூன் 23-இல் மறுதேர்வு நடத்த முடிவெடுத்துள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை உச்ச நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.  உள்ளிட்ட இளங்கலை மருத்துவப் படிப்புக்களுக்கான ‘நீட்’ (National Entrance-cum-Eligibility Test - NEET) தேர்வில் மிகப்பெரிய அள விற்கு மோசடிகள் நடைபெற்றுள்ள தாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து, தேசிய தேர்வு முகமை (National Testing Agency - NTA)  பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் கடந்த ஜூன் 11 அன்று உத்தர விட்டுள்ளது.

‘நீட்’ (NEET-UG 2024) தேர்வில் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக கூறி, ஜூன் 1 அன்று சிவாங்கி மிஸ்ரா உட்பட 10 மாணவர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த னர். இந்த வழக்கின் விசாரணை யின் போதே, “நீட் தேர்வு விஷயத்தில் அதனுடைய மாண்பு பாதிக்கப் பட்டுள்ளது” என்றும்; எனவே, “நீட் தேர்வில் மோசடி நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர் பாக, தேசிய தேர்வு முகமை பதி லளிக்க வேண்டும்” என்றும் உத்தர விட்டு, வழக்கை ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனர்.

பீகார், ராஜஸ்தானில் வினாத் தாள் கசிந்ததாக ஆரம்பத்திலேயே புகார் எழுந்தது. அதற்கேற்பவே தேர்வு முடிவுகளில், நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்திருந்ததும், ஹரியானாவில் ஒரே தோ்வு மையத்தில் தேர்வு எழு திய 6 போ் முதலிடம் பிடித்ததும், நீட்  தேர்வில் முழு மதிப்பெண் பெற்ற மாணவி, பிளஸ் 2 தேர்வில் 50 சத விகிதம் கூட மதிப்பெண் பெறாததும், இவர்களில் 1523 பேருக்கு கரு ணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சந்தேகங்களை கிளப்பியது. இது தொடர்பாக புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; நீட் தேர்வை  ஏற்காத மாநிலங்களுக்கு விலக்கு  அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அர சியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. போராட்டங்களையும் அறிவித்தன.

இதனிடையே, நீட் தேர்வை ரத்து செய்வது, மறுதேர்வு நடத்துவது மற்றும் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்களை ரத்து செய்வது குறித்து தொடரப் பட்டிருந்த மூன்று மனுக்கள் வியாழ னன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும்  அசானுதீன் அமானுல்லா ஆகி யோர் அடங்கிய உச்ச நீதிமன்ற விடு முறை கால இரு நீதிபதிகள் அமர்வு,  இந்த மனுக்களை விசாரித்தது.

அப்போது, தேசிய தேர்வு முகமை (NTA) சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நரேஷ் கவுசிக், “1,563 பேருக்கு மறுதேர்வு நடத்தப் படும். இதற்கான அறிவிப்பு இன்று (வியாழக்கிழமை) வெளியாகும். மறுதேர்வு ஜூன் 23-ஆம் தேதியும், அதன் முடிவுகள் 30-ம் தேதியும் வெளியாகும்” என தெரிவித்தார்.

மேலும், 1,563 பேருக்கு கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு, அவர்களது அசல் மதிப்பெண் விவரம் வெளியிடப்படும்; அந்த  மதிப்பெண்ணுடனேயே கலந் தாய்வில் பங்கேற்பதா, அல்லது மறு தேர்வை எதிர்கொண்டு அதில் வரும் மதிப்பெண்ணை வைத்து கலந்தாய் வில் பங்கேற்பதா என்பது குறித்த முடிவை தேர்வர்கள் எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, “கலந்தாய்வு பணி கள் பாதிக்கப்படாத வகையில் மறு தேர்வை விரைந்து நடத்த வேண்டும்” என நீதிபதிகள் கூறிய நிலையில், “மறு தேர்வு முடிவுகள் ஜூன் 30-ஆம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும்; அதைத்தொடர்ந்து, இளங்கலை மருத்துவ கலந்தாய்வு ஜூலை 6 அன்று தொடங்கும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இந்த முன்மொழிவை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

தேர்வு முறையை மாநில அரசு
தீர்மானிப்பதே தீர்வு!
முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

நீட் தேர்வு முறைகேடு குற்றச்சாட்டைத் தொடர்ந்து, மறுதேர்வுக்கு மோடி அரசு ஒப்புக் கொண்டிருப்பது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 

“கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டதன் மூலம் சமீபத்திய நீட் தேர்வு முறைகேட்டில் இருந்து தப்பிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி செய்வது அவர்களின் திறமையின்மையின் மற்றொரு ஒப்புதலாகும்.

மாநிலங்களின் உரிமையைப் பறித்த பிறகு, முறைகேடுகளின் மையமாக விளங்கும் பிரச்சனைகள் மற்றும் ஒழுங்கற்ற முறையில் தேர்வு களை நடத்துவது போன்ற முக்கிய பிரச்சனைகளில் இருந்து கவனத்தைத் திசைத்திருப்ப அனுமதிக்கக்கூடாது. ஒன்றிய அரசின் திறமையின்மை யையும், லட்சக் கணக்கான மாணவர்களின் வேதனையைப் பற்றிய அவர்களின் அக்கறையின்மையையும் கண்டிக்கும் அதே வேளையில், மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு முறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதுதான் இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.” இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.