புதுதில்லி
மார்ச் 15க்குள்
மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது?
17ஆவது மக்களவை தேர்தல் தொடர் பாக தலைமை தேர்தல் ஆணை யர் தலைமையில் உயர்மட்டக் குழு மாநிலம் வாரியாக அம்சங்களை ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், மார்ச் 14 அல்லது 15ஆம் தேதிக்குள் மக்க ளவை தேர்தலுக்கான தேர்தல் அட்ட வணை வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரி விப்பதாக செய்திகள் வெளியாகியுள் ளன. கடந்த தேர்தலை (2019) போலவே 17-ஆவது மக்களவை தேர்தலை 7 கட்டங்களாகவும், முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவை ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கவும் இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா
உயர்நீதிமன்ற நீதிபதியை வளைத்த பாஜக
கட்சியில் இணைவதாக
அபிஜித் அறிவிப்பு
மேற்குவங்க மாநிலம் கொல் கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த அபிஜித் கங்கோபாத்யாய். இவர் மாநிலத்தின் கல்வி மற்றும் இதர பிரச்சனைகளில் மாநில அரசுக்கு எதிராகவும், ஒன்றிய அரசு மற்றும் ஆளுநரின் உத்தரவுக்கு ஆதரவாகவும் தொடர் உத்தரவுகளை பிறப்பித்து வந்தார். இதனால் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு நீதிபதி அபி ஜித்தின் உத்தரவுகளுக்கு நேரடியாக விமர்சனத்தை தொடுத்தது.
இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், கடந்த ஞாயிறன்று நீதிபதி அபிஜித், மார்ச் 5 அன்று தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், திரி ணாமுல் காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மற்ற எதிர்க்கட்சிகளில் எதாவது ஒன்றில் இணைய உள்ளதாகவும் அவர் அறி வித்தார்.
இந்நிலையில், அறிவித்தது போலவே செவ்வாயன்று அபிஜித் கங்கோபாத் யாய் நீதிபதி பதவியை ராஜினாமா செய் தார். பின்பு மார்ச் 7 அன்று பாஜகவில் இணைவதாக அறிவித்துள்ளார். பாஜக வில் சேர்ந்த கையோடு நீதிபதி அபிஜித் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத் தின் தம்லுக் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள் ளது.
புதுதில்லி
கூட்டுச்சதி என்ற பெயரில் வழக்கு தொடர முடியாது
அமலாக்கத்துறைக்கு
உச்சநீதிமன்றம் குட்டு
தற்போதைய கர்நாடக துணை முதல் வரும், காங்கிரஸ் மூத்த தலைவரு மான டி.கே.சிவகுமார் கடந்த 2014 முதல் 2018 வரை கர்நாடக மாநிலத்தின் எரிசக்தி துறை அமைச்சராக பதவி வகித்தார். 2018இல் கூட்டுச்சதி மூலம் சட்டவிரோதமாக பணபரிவர்த்தனைகள் மேற்கொண்டதாக குற்றம் சாட்டி, வரு மான வரித்துறையினர் டி.கே.சிவகுமார் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நடைபெறும் சம்பவங்கள் போன்று டி.கே. சிவகுமார் வழக்கையும் கையிலெடுத்த அமலாக்கத்துறை தொடர் சம்மனை அனுப்பி வந்தது. சம்மனை ரத்து செய்யு மாறு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக் கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட் டது. இதையடுத்து, டி.கே.சிவகுமார் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுதொடர்பான விசாரணை முடி வில் செவ்வாயன்று உச்சநீதிமன்ற நீதிபதி கள் தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பில், “கூட்டுச் சதி என்ற புகாரை மட்டுமே வைத்து சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கு தொடர முடியாது என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்திருந்தது. இதனை மேற்கோள் காட்டி டி.கே.சிவ குமார் மீதான வழக்கு ரத்து செய்யப்படு கிறது” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறி னர்.
இமாச்சலப்பிரதேசத்தின் மண்டியில் செவ் வாயன்று காலை 6.56 மணி அளவில், பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவு கோலில் 3.2 அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதை யடுத்து, பொதுமக்கள் சாலையில் தஞ்சமடைந் தனர்.
காங்கிரஸில் இருந்து விலகிய குஜராத் முன்னாள் முதல்வர் மோத்வாடியா செவ்வாயன்று பாஜகவில் இணைந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் அருகே உள்ள நர்சுய்யா கிராமத்திற்கு அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ.51 லட்சம் மதிப்புக் கொண்ட தங்க பேஸ்ட் மற்றும் பணத்தை மலேசியாவிற்கு கடத்த முயன்றவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஜார்க்கண்டில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் 7 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்.
மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலை யில் பாஜக உத்தப்பிரதேச மாநில அமைச்சர வையில் “இந்தியா” கூட்டணியில் இருந்து பாரத ரத்னா விருதுக்காக ஓட்டம் பிடித்த ராஷ்ட்ரிய லோக் தளம் மற்றும் எஸ்பிஎஸ்பி ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்துரைத்து, சந்தேஷ்காளி சம்பவம் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார் தேசிய மக ளிர் ஆணையத்தின் தலைவி ரேகா ஷர்மா.
மேற்குவங்கத்தில் அமலாக்கத்துறையினர் தாக்கப்பட்ட சம்பவத்தை சிபிஐ விசா ரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஆணை யிட்டுள்ள நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக அம்மாநில அரசு மேல்முறையீடு செய்துள்ளது.