india

img

ராஜஸ்தானில் பிருந்தா காரத், அம்ராராம் போராட்டம்

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் கமிஷனரேட்டின் பங்க்ரோட்டா காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக் காவலர் பாபுலால் பைர்வா ஆகஸ்ட் 22 வியாழன் அன்று காவல் நிலையத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாபுலால் உயிரிழப்பில் மர்மம் உள்ளதாகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதுடன், இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவியும், அவரது மனைவி மற்றும் மகனுக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், சிபிஎம் ராஜஸ்தான் மாநிலச் செயலாளரும், சிகார் எம்பியுமான அம்ரா ராம் ஆகியோர் முன்னிலையில் சிபிஎம் ஊழியர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் எஸ்எம்எஸ் மருத்துவமனையின் பிணவறைக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.