india

img

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்கலம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 
மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்த வண்ணங்களை கக்கும் புகைக்குண்டுகளை வீசிய விவகாரத்தை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் பிற்கலம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன் கோஷங்களை எழுப்பி, சபை நடவடிக்கைகளை சீர்குலைத்ததாக கூறி இருந்து குளிர் கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டார்.
 

;