india

img

நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 7-ஆம் தேதி தொடங்கியது. இக்கூட்டத்தொடர் வரும் 29-ஆம் தேதி வரை 17 அமர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பாக அலுவலக பரிந்துரை குழு கடந்த 20-ஆம் தேதி கூடி ஆலோசனை மேற்கொண்டது. அதில், 23-ஆம் தேதியோடு குளிர்காலக் கூட்டத் தொடரை முடித்துக்கொள்வது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. 
இந்த நிலையில், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிவடைந்தன. இரு அவைகளும் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.