15 வயது முதல் 18 வரை உள்ள சிறார்களுக்கு ஜனவரி 3 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவு தொடங்கும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 15 - 18 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதற்கான முன்பதிவுகள் ஜனவரி 1 முதல் கோவின் தளத்தில் தொடங்குவதாக ஒன்றிய அரசு தற்போது அறிவித்துள்ளது.
மேலும், இந்த முன்பதிவுக்கு ஆதார் கட்டாயமில்லை என்றும், ஆதார் அட்டை இல்லாத சிறார்களுக்கு 10ஆம் வகுப்பு அடையாள அட்டையைக் காட்டி தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம் எனக்கூறப்பட்டுள்ளது.