india

தில்லியில் 40 பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

மோடி அரசின் காவல்துறை யின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லியில் ஒரே  நாளில் 40 தனியார் பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தில்லி காவல் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு ஜி.டி.கோயங்கா, பஸ்சிம் விகார் பகுதியில் இருந்து காலை 6.15 மணிக்கும், டி.பி.எஸ்., ஆர்.கே.புரத்தில் இருந்து காலை 7.06 மணிக்கும் வெடி குண்டு மிரட்டல் அழைப்புகள் வந்தன. இதேபோல மதர் மேரிஸ் பள்ளி, பிரிட்டிஷ் பள்ளி, சல்வான் பப்ளிக் பள்ளி, கேம்பிரிட்ஜ் மற்றும் 36 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினர், மோப்ப நாய்கள், வெடிகுண்டு கண்டறி யும் குழுவினர், தில்லி போலீசார் ஆகி யோர் பள்ளிக்கு வந்து தேடுதல் பணி யில் ஈடுபட்டனர்.

அடுத்தடுத்து 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள தால் முன்னெச்சரிக்கையாக மாண வர்கள் பள்ளியில் இருந்து வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். சோதனை முடிவில் சந்தேகத்திற்கிடமான வகை யில் எந்த பொருளும் கிடைக்கவில்லை என்பதால், இது வெறும் புரளி என தில்லி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தில்லியில் ஒரே நாளில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.