india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வெடி குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வோர்லி யில் உள்ள போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு வெள்ளியன்று நள்ளிரவு 12.30 மணியளவில் குறுஞ்செய்தி வந்தது. அதில் மும்பை நகரின் 6 முக்கிய இடங்களில் குண்டுகள் வெடிக்கும் எனக்  கூறப்பட்டிருந்தது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மும்பை நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.  

கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல இந்தி நடிகை பூனம் பாண்டே (32) சிகிச்சை பலனின்றி வியாழனன்று நள்ளிரவு உயிரிழந்தார்.  

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரசின் முன்னாள் எம்பி மஹு வா மொய்த்ரா தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு குடி யிருப்பை காலி செய்யுமாறு எஸ்டேட் இயக்குநர கத்தின் (டிஓஇ) வெளியேற்ற நோட்டீஸை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற தில்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மஹுவா மொய்த்ரா கடந்த மாதம் தில்லியில் உள்ள தனது அரசு குடியிருப்பை காலி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி மலையில் ஆந்திர மாநில அமைச்சர் ரோஜாவை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சூழ்ந்து ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு எதிரான கோஷம் போட்டனர்.

இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத் தில் உள்ள சட்லஜ் ஆற்றில் கார் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலத்தில் அரசுப் பேருந்து களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத் துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, ஆட்டோவுக்கு தீ வைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டம் (யுசிசி) தொடர்பான சட்ட  வரைவு வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்டுள் ளது. பிப்.6-ஆம் தேதி யுசிசி வரைவு விவாதத்துக் காக முன்வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்