புவனேஸ்வரம் பாஜக ஆளும் ஒடிசா மாநி லத்தின் கட்டாக் நகரில் உள்ளது 156 ஆண்டுகள் பழ மையான ராவென்ஷா பல்கலைக் கழகம். அரசு கட்டுப்பாட்டில் உள்ள ராவென்ஷா கல்லூரி 2006இல் பல் கலைக்கழகமாக மாறிய நிலையில், 2017இல் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது ராவென்ஷா பல்கலைக்கழகம்.
ராவென்ஷா கல்லூரி உத்கல் கவுரப் மதுசூதன் தாஸ், ஆச்சார்யா ஹரிஹர தாஸ், பண்டிட் கோபபந்து தாஸ், பண்டிட் நீலகண்ட தாஸ் போன்ற புகழ்பெற்ற ஒடியா ஆளுமைகளை உருவாக்கியுள்ளது. மேலும் பி.கே.பரிஜா, காளிந்தி சரண் பாணிக்ரஹி, அன்னதா ஷங்கர் ராய், கோபிநாத் மொஹந்தி, மனோஜ் தாஸ் போன்ற சிறந்த பிரபலங்கள் ராவென்ஷா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஆவர்.
தற்போது ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றிய நிலை யில், கடந்த மாத இறுதியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “கட்டாக்கில் உள்ள 156 ஆண்டுகள் பழமையான ராவென்ஷா பல்கலைக் கழகத்தின் பெயர் மாற்றப்பட வேண்டும் என்று தான் தனிப்பட்ட முறை யில் கூறுகிறேன்” என அவர் கூறினார். ஒடிசாவில் ஆட்சியை கைப்பற்றியவு டன் தங்களது வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை பாஜக துவங்கியுள்ளது என பிஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், ராவென்ஷா பல் கலைக்கழக பெயரை மாற்ற வேண்டும் என ஒன்றிய பாஜக அமைச்சரின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக வளாகத்தில் “சேவ் ரவென்ஷா மரபு மன்றம் (save Ravenshaw)” என்ற பெயரில் மாண வர்கள் போராட்டம் நடத்தி வருகின்ற னர். புதனன்று மாலை ராவென்ஷா பல் கலைக்கழக பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ராணிஹாட் சதுக்கத்தி லிருந்து பல்கலைக்கழக வளாகம் வரை மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர். பேரணியில் “வரலாற்றுச் சிறப்புமிக்க ராவென்ஷா பெயரை மாற்ற விட மாட்டோம்” என முழக்கங்களை எழுப்பினர்.
மாணவர்கள் பேரணி பல்கலைக் கழக வளாகத்தை அடைந்த பொழுது, பல்கலைக்கழகத்திற்கு தொடர்பு இல்லாத வெளியாட்கள் மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர். மாணவர்களும் பதிலடி கொடுக்க பல்கலைக்கழக வளாகம் வன்முறை பூமியாக மாறியது. பின்னர் போலீசார் தடியடி மூலம் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பாஜக குண்டர்கள்
ராவென்ஷா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய வர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ள நிலை யில், மாநில காவல்துறை பாஜக குண்டர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என மாணவர்கள் தரப்பில் குற்றச்சாட்டும் எழுந்துள்ளன.