சொன்னது
“தாய்மார்களும், மகள்களும் வலிமையடையும்போது, குடும்பம் வலுப்பெறுகிறது. தாய்மார்கள், மகள்களின் நலனுக்கு எங்கள் அரசு முன்னுரிமை அளிக்கிறது” - நரேந்திர மோடி
“ஒவ்வொரு குடும்பத்தின் முழுமையான நல்வாழ்வை உறுதி செய்ய எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது. இது பெண்களின் ஆரோக்கியம் மற்றும் கண்ணியத்துடன் தொடங்குகிறது” - நரேந்திர மோடி.
“நமது சகோதரிகளும் மகள்களும் தங்கள் வீடுகளில் கழிப்பறைகள் இல்லாததால் வலியையும் அவமானத்தையும் தாங்க வேண்டியிருந்த நாட்கள் மலையேறிவிட்டன”. - நரேந்திர மோடி
பெண்களுக்கான முறையாக கட்டப்பட்ட வீடுகள் மற்றும் உஜ்வாலா கேஸ் சிலிண்டர்கள்; 50 சதவீத ஜன்தன் கணக்குகள் பெண்களின் பெயரில்; 65 சதவீத முத்ரா கடன்கள் பெண்கள் பெற்றுள்ளனர்;
10 கோடிக்கும் அதிகமான சுய உதவிக் குழு பெண்கள் பயனடைந்துள்ளனர், 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் லட்சாதிபதிப் பெண்களாக மாறியுள்ளனர். 3 கோடி பெண்களை ‘லட்சாதிபதிப் பெண்கள்’ ஆக மாற்றுவதே எங்கள் இலக்கு.
உண்மை நடப்பு என்ன?
l உலகிலேயே இந்தியாவில்தான் பெண்களும் குழந்தைகளும் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
l தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 5 (NFHS 5) கூறுகிறது: “ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் முப்பத்தாறு சதவீதம் பேர் வளர்ச்சி குன்றியவர்கள்; 19 சதவீதம் உயரம் குறைவானவர்களாகவும், 32 சதவீதம் பேர் எடை குறைவானவர்களாகவும் உள்ளனர்” - (டிசம்பர் 2022.)
l மற்றொரு கணக்கெடுப்பின்படி, ‘இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 44 சதவீதம் பேர் எடை குறைவாக உள்ளனர். 72 சதவீத குழந்தைகளும், திருமணமான பெண்களில் 52 சதவீதம் பேரும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
l மறுபெயரிடப்பட்ட மதிய உணவுத் திட்டமான பி.எம் போஷனுக்கான நிதி முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. PM-Poshan திட்டம், முன்பு மதிய உணவுத் திட்டம் என்று அழைக்கப்பட்டது. 2023-24 இல் இதற்கென ரூ. 11,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இது 2022-23இல் திருத்தப்பட்ட ஒதுக்கீட்டின் ரூ. 12,800 கோடியிலிருந்து சரிந்துள்ளது.
l ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வு, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் உணவு கிடைக்காத குழந்தைகள் (6.7 மில்லியன்) இருப்பதைக் கண்டறிந்தது.
l கருவுறுதல், பிரசவம் அல்லது பிறந்த முதல் வாரங்களில் ஒவ்வொரு ஆண்டும் இறக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் 2015 முதல் முன்னேற்றம் தடைபட்டுள்ளது என்று தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம் குறித்த ஐ.நா அறிக்கை (மே 2023) கண்டறிந்துள்ளது.
l பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா ரூ. 5,000 ஒரு முறை மட்டுமே வழங்குகிறது. இது 2017 முதல் எவ்வித மாற்றமும் இன்றி நீடிக்கிறது. இது சமீபத்தில் இரண்டாவது பெண் குழந்தைக்கு மட்டும் ரூ. 6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தகுதியான பயனாளிகளில் 20 சதவீதம் பேர் மட்டுமே திட்டத்தை அணுக முடிகிறது. மேலும் பதிவு செய்ய ஆதாரை கட்டாயமாக்கிய பிறகு, அந்த எண்ணிக்கை 2022இல் 46 சதவீதம் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2023-24 ஆம் ஆண்டுகளில் பட்ஜெட் ஒதுக்கீடு 17 சதவீதம் குறைந்துள்ளது. 29 சதவீத பயனாளிகள் மட்டுமே இரண்டு தவணைகளையும் பெற்றுள்ளனர்.
l ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டதாலும், இணைக்கப்பட்டதாலும் பெண் கல்வி மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன்களை அவர்கள் அணுகாதது நிலைமையை மோசமாக்கியுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. இவை அனைத்தும் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதங்களை அதிகரித்துள்ளது.
l ஒன்றிய அரசின் ‘பேட்டி பச்சாவ்! பேட்டி படாவோ!’ திட்டம் (பெண் குழந்தையைக் காப்போம்; பெண் குழந்தைக்கு கற்பிப்போம்) குறித்த நாடாளுமன்றக் குழு அறிக்கையில், 2016-19க்கு இடையில், விடுவிக்கப்பட்ட ரூ. 446.72 கோடி நிதியில், 78.9 சதவீதம் ஊடக விளம்பரத்துக்கே செலவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
l ‘உஜ்வாலா திட்டத்தின்’ கீழ் வழங்கப்பட்ட சிலிண்டர்களை மீண்டும் நிரப்புவதற்கான செலவுகள் அதிகரித்துள்ளதால், பல சிலிண்டர்கள் காலியாக உள்ளன. 2021-22ஆம் ஆண்டில், 90 லட்சம் பயனாளிகள் தங்கள் சிலிண்டர்களை மீண்டும் நிரப்பவில்லை (தி இந்து) சுமார் 1 கோடிப் பேர் தங்கள் சிலிண்டர்களை ஒரு முறை மட்டுமே நிரப்பினர்.
l 2017 ஆம் ஆண்டில் யுனிசெப் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான - சுமார் 620 மில்லியன் மக்கள் - திறந்தவெளியில் மலம் கழிப்பதாக தெரிவித்தது (இந்துஸ்தான் டைம்ஸ்).
l மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில், 2019 ஆம் ஆண்டில் 2,34,489 கழிப்பறைகள் கட்டுவது என்ற இலக்குக்கு எதிராக 7,327 கழிப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன.
l மோடி அரசாங்கத்தின் முதன்மை ஸ்வச் பாரத் மிஷனின் கீழ் கிராமப்புற இந்தியாவில் கட்டப்பட்ட கழிப்பறைகளின் பயன்பாடு 2018-19 மற்றும் 2020-21க்கு இடையில் 12 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது.
l கழிப்பறை பயன்பாட்டின் சரிவு பட்டியல் சாதியினர் (எஸ்சி) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) சமூகங்களிடையே முறையே 20 மற்றும் 24 சதவீத புள்ளிகள் தெளிவாகத் தெரிகிறது.
l ஜன்தன் யோஜனா (ஜே.டி.ஒய்) கணக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை பெண்களால்
வைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் கடன் வாங்குபவர்களில் 30 சதவீதத்திற்கும் குறை
வாகவே உள்ளனர். ஆண்களுக்கு வழங்கப்படும் 52 சதவீதத்துடன் ஒப்பிடும்போது பெண்கள் அவர்களின் வைப்புத்தொகையில் 27 சதவீதத்திற்கு மட்டுமே கடன் பெறு
கிறார்கள். அவர்களின் பெரும்பாலான கணக்குகள் செயலற்றவை; அல்லது அரசாங்க திட்டங்களின் பலன்களை அணுக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
l சுய உதவிக் குழுக்களுக்கு பெருமளவில் ஆதரவு அளிப்பதாக அரசு கூறினா
லும், அவற்றுக்கான கடன் வழங்கும் பொறுப்பு சுரண்டும் நுண் நிதி நிறுவனங்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் பல பெண்கள் கடன் வலையில் விழுந்துள்ளனர். எம்.எஃப்.ஐ. கடன் சேகரிப்பாளர்களின் கைகளில் அவமானத்தையும் வன்முறையை யும் கூட எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
l தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) 2023 அறிக்கையின்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2021ஐ விட 2022இல் 2.13 சதவீதம் அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 3,15,215 வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளன. இது 2022ஆம் ஆண்டில் 3,65,300 வழக்குகளாக அதிகரித்துள் ளது. ஆறு ஆண்டு காலப்பகுதியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விகிதம் 15.88 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டில், பெண்களுக்கு எதிரான குற்றங்
களின் விகிதம், அதாவது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு பெண்களுக்கு எதிரான
குற்றங்களின் எண்ணிக்கை 56.3 ஆக இருந்தது. இது 2022இல் 66.4 ஆக உயர்ந்தது.
l பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 2017 முதல் 2022 வரை தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 2022ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான அதிக குற்ற விகிதம் உள்ள மாநிலங்களில் தில்லி மற்றும் ஹரியானா ஆகியவை இருந்தன.
l NCRB தரவுகள் 2017 முதல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் 14.47 சதவீதம் அதிகரித்துள்ளதாக பதிவு செய்துள்ளன. 2022 ஆம் ஆண்டில் பதிவான மொத்தம் 63,414 வழக்குகளில் 8,136 வழக்குகளுடன் உத்தரப்பிரதேசத்தில் இந்த பிரி
வில் அதிக குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2017 ஆம் ஆண்டில், போக்சோவின் கீழ் 32,608 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இது 2022இல் 63,414 ஆக உயர்ந்தது. இது 94 சதவீதம் அதிகரிப்பு. இந்தியாவில் தண்டனை விகிதம் 23 முதல் 25 சதவீதம் வரை குறைவாக உள்ளது.
பாஜக ஆட்சியில் பெண்கள் மிகவும் பாதுகாப்பற்றவர்களாக, தாக்குதல் மற்றும் வன்முறைக்கு பெரிதும் ஆளாகக்கூடியவர்களாக, நீதி மறுக்கப்பட்டவர்களாக உள்ளனர்.
பெண்களின் பாதுகாப்பு - நல்வாழ்வை உறுதி செய்வோம்!
பாஜகவை தோற்கடிப்போம்!