காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியின் 2-ஆம் கட்ட யாத்தி ரையான “இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை” மணிப்பூர், அசாம், அருணாச்சலப்பிர தேசம், மேகாலயா ஆகிய மாநி லங்களை கடந்து, தற்போது மேற்குவங்க மாநிலத்தில் சென்று கொண்டிருக்கிறது.
கடந்த ஒரு வாரமாக அசாம் மாநிலத்தில் இந்த யாத்திரை சென்ற பொழுது, யாத்திரையில் “இந்தியா” கூட்டணி கட்சி கள், பொதுமக்கள் என ஏராள மானோர் திரண்டதால் பதற்ற மடைந்த பாஜக, தனது தொண் டர்கள் மூலம் மோதலை கிளப்பி விட்டது. இதனால் கவுகாத்தி யில் காங்கிரஸ் தொண்டர்களுக் கும், அசாம் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் தொடர்பாக ராகுல் காந்தி, காங்கிரஸ் பிரமுகர்கள் மீது கலவரம், சட்டவிரோதமாக கூடுதல், குற்றச்சதி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் 9 பிரிவுகள் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தியை நிச்சயம் கைது செய்வோம் என அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மிரட்டி இருந்தார்.
இந்நிலை யில், இந்த சாதாரண தள்ளு முள்ளு வழக்கில் ஆழமான விசா ரணையை மேற்கொள்ளப்போவ தாக மாநில சிஐடி பிரிவுக்கு அதி வேகமாக மாற்றியுள்ளது அசாம் பாஜக அரசு. விசாரணையை தீவிரப் படுத்தி உத்தரப்பிரதேச மாநி லத்திற்கு செல்வதற்கு முன்பே காங்கிரஸ் யாத்திரையை சீர் குலைக்க பாஜக தீவிரமாக கள மிறங்கியுள்ளது.