india

பொய்யர்களின் தலைவர் மோடி

பாட்னா, மார்ச் 3-
பிரதமர் நரேந்திரமோடி, பொய்யர்களின் தலைவர் என்று பாட்னாவில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் சாடினர்.
ராஷ்டிரிய ஜனதாதளத் தலைவர் தேஜஸ்வி மேற்கொண்ட மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தின் முத்தாய்ப்பாக பாட்னாவில் ஞாயிறன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர்கள் ஆற்றிய உரையின் அம்சங்கள் வருமாறு:

பாஜக பொய்களின் தொழிற்சாலை: தேஜஸ்வி

“நாங்கள் நிதிஷ்குமாரை தவ றாக பயன்படுத்தவில்லை. அவ ரைப் பயன்படுத்தி முறைகேடு செய்யவில்லை. மக்களுக்கான நல்ல திட்டமான வேலையை மட் டுமே வழங்கினோம். இதனைக் கண்டு அஞ்சி நிதிஷ்குமார் மீண்டும் மோடியின் காலடிக்கே சென்றார். உண்மையில் நிதிஷ்  குமாருக்கு வெட்கமாக இல் லையா? பாஜக பொய்களின் தொழிற்சாலை. ஆனால் ஆர்ஜேடி  என்பது உரிமைகள், வேலைகள் மற்றும் வளர்ச்சியின் தொழிற் சாலை. நாங்கள் பீகார் மற்றும்  நாட்டின் மக்களின் உரிமைகள்,  வேலைகளுக்காக போராடு கிறோம். ஆனால் நிதிஷ் - பாஜக  கூட்டணி ஆட்சி அதிகாரத்தை கைப்  பற்ற மட்டுமே போராடுகிறது. ஆட்சி  அதிகாரம் கிடைத்துவிட்டால் நிதிஷ் குமார் உட்பட அனைவரும் உயிரற்ற உடல்களைப் போல மக்  களுக்கு எதுவும் செய்யாமல் சரிந்து  விடுவார்கள். இவர்களை நாம் அகற்றினால்தான் வாழ்வை பற்றி  சிந்திக்க முடியும்” என ஆர்ஜேடி  தலைவர் தேஜஸ்வி உரையாற்றி னார். 

ஒன்றைக் கூட நிறைவேற்றாத மோடி அரசு: சீத்தாராம் யெச்சூரி 
“பிரதமர் மோடி தமது உத்தர வாதங்களில் ஒன்றைக் கூட நிறை வேற்றவில்லை. அவருக்கு உத்தர வாதம் என்றால் என்னவென்று தெரி யாதது போல இருக்கிறார். வெறும்  பேச்சு மட்டும் அல்லாமல் வேலை  செய்ய வேண்டும். அப்பொழுது தான் உத்தரவாதம் நல்ல திட்டங்க ளாய் மக்களைச் சென்றடையும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி பொதுக்கூட்டத்தில் பேசினார்.

பாஜகவிற்கு விடைகொடுப்போம்: லாலு பிரசாத்
“ராஷ்டிரிய ஜனதாதளம் தலித்துகள், ஏழைகள், பிற்படுத்  தப்பட்ட மக்களுக்கு சொந்தமா னது. பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு, ஒவ் வொரு வாங்கி கணக்கிலும் ரூ.15  லட்சம் வழங்கப்படும் என பல்வேறு  வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் வாக்குறுதிகள் அனைத் தும் கானல் நீரைப் போன்று காணா மல் போனது. “இந்தியா” கூட்டணி யுடன் மக்கள் அனைவரும் ஒன்றி ணைந்தால் வகுப்புவாத மோடி அர சிற்கு விடைகொடுக்கலாம். கண் டிப்பாக விடைகொடுப்போம்” என்று ராஷ்ட்ரிய ஜனதாதள தலை வர் லாலு பிரசாத் பொதுக்கூட்டத் தில் உரையாற்றினார்.

பாஜகவினர் அரசியலமைப்பை உண்பவர்கள்: அகிலேஷ்
“விவசாயிகள் மகிழ்ச்சியற்று உள்ளனர். இளைஞர்களுக்கு வேலை இல்லை. பாஜகவின் 10  ஆண்டுகால ஆட்சியில் பொதுமக்  களுக்கு என்ன செய்தனர் என்பதை  மோடியே கூற முடியாது. உத்த ரப்பிரதேசம் போல பீகாரும் மாற்  றத்தை நோக்கி நகருகிறது. வர விருக்கும் மக்களவைத் தேர்தல் வழக்கமான தேர்தல் மட்டுமல்ல; நாட்டின் அரசியலமைப்புச் சட் டத்தை காப்பாற்ற வேண்டிய முக்  கிய நிகழ்வு ஆகும். இங்கு இருக்  கும் தலைவர்கள் அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாப்பவர்கள். ஆனால் பாஜகவினர் அரசியல மைப்பை தின்பவர்கள்; அரசியல மைப்பை அழிப்பவர்கள். இதனால்  மக்களாகிய நீங்கள் பாஜகவை துரத்த வேண்டும்” என சமாஜ்வாதி  தலைவர் அகிலேஷ் பேசினார்.

கார்கே கடும் சாடல்
“மக்களே உங்களிடம் மோடி  கூறியது அனைத்தும் உத்தர வாதங்கள் அல்ல. பொய் மூட்டை கள். ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம்  வேலைகள், வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம், ஒவ்வொருவருக்கும் வீடு என பல்வேறு வாக்குறுதி அளித்திருந்தார். கிடைத்ததா? இல்லை. இனிமேல் கிடைக்கவும் வாய்ப்பில்லை. காரணம் பிரதமர்  மோடி பொய்யர்களின் தலைவர். மோடி பாட்னாவை ஸ்மார்ட் சிட்டி யாக மாற்றுவதாக வாக்குறுதி அளித்தார். அதன் நிலைமையை நீங்கள் அனைவரும் தற்போது பார்க்கிறீர்கள். 

வேலை இல்லாத காரணத்தால் மோடியின் குஜராத் மாநிலத்தில்  கடந்த 3 ஆண்டுகளில் 25 ஆயிரம்  பேர் தற்கொலை செய்து கொண் டுள்ளனர். அனைவரையும் ஏமாற்று வது மோடியின் உத்தரவாதம். ஆனால் தேஜஸ்வி உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றினார். 17 மாதங்களில் லட்சக்  கணக்கான வேலை வாய்ப்புகள் இதற்கு உதாரணம். 

அரசியல் சட்டத்தைக் காப்  பாற்ற வேண்டுமானால், பாஜக வை ஆட்சியில் இருந்து அகற்ற  வேண்டும். நாட்டின் அரசியல மைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவது உங்கள் பணி. பாஜகவினர் அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய அமைப்பு களை வைத்து மிரட்டுகிறார்கள். இதற்கெல்லாம் “இந்தியா” கூட் டணி அஞ்சப் போவதில்லை. 2024இல் அதிகபட்ச இடங்களைப்  பெற்று பாஜகவை தோற்கடிப் போம்” என காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.