india

img

‘அமலாக்கத்துறை இல்லையெனில் பாஜக காலியாகிவிடும்’

வரவிருக்கும் மக்களவைத் தேர்த லில் பஞ்சாப்பில் தனித்து போட்டியிட அரவிந்த் கெஜ்ரி வால் அறிவித்ததால், நிதிஷ் (ஐக்கிய ஜனதாதளம்), ஜெயந்த் சவுத்ரி (ஆர்எல்டி) போன்று ஆம் ஆத்மி “இந்  தியா” கூட்டணியிலிருந்து பிரிந்ததாக வும், மக்களவை தேர்தல் வரை “இந்  தியா” கூட்டணி தாக்குப்பிடிக்க வாய்ப்  பில்லை எனவும் ஊடகங்கள் மூலம் பாஜக அரசியல் ஆதாய புரளியை கிளப்பி விட்டது.

இந்த புரளிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில், தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி ஏற்  பாடு செய்திருந்த மதிய உணவு விருந்  தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன  கார்கே, ஆம் ஆத்மி தலைவரும் தில்லி  முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்வில் மக்களவைத் தேர்த லில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையி லான தொகுதிப் பங்கீடு (தில்லி, ஹரி யானா, குஜராத்) குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பேச்சு வார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்,  “அமலாக்கத்துறையை தடுத்து, பண  மோசடி தடுப்புச் சட்டப்பிரிவை (PMLA-45)  ஒழித்தால் பாஜகவில் இருக்கும் பாதி  அரசியல் தலைவர்கள் அக்கட்சியிலி ருந்து விலகி விடுவார்கள். பாஜகவின்  முக்கிய தலைவர்களாக இருக்கும் சிவ ராஜ் சிங் சவுகான், வசுந்தரா ராஜே  போன்றோர் தங்களுக்கென தனித்தனி யாக கட்சியை தொடங்கி விடுவார்கள். பிற கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் எல்லாம் பாஜகவில் சேர முக்கிய கார ணமே அமலாக்கத்துறைதான்.

அம லாக்கத்துறை இல்லையென்றால் யாரும் பாஜகவில் இணைய மாட் டார்கள்” என கூறினார்.

6-ஆவது சம்மனையும் கெஜ்ரிவால் புறக்கணித்தார்

மக்களவைத் தேர்தலுக்கு முன்  அமலாக்கத்துறை மூலம் கெஜ்ரி வாலை கைது செய்ய மோடி அரசு  துடியாய்த் துடித்து வரும் நிலை யில், தில்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக கெஜ்ரிவா லுக்கு அமலாக்கத்துறை 5 முறை  சம்மன் அளித்தது. அமலாக்கத் துறை அனுப்பும் சம்மன் சட்டவிரோ தம் எனக் கூறி 5 சம்மனையும் கெஜ்ரி வால் புறக்கணித்தார். இந்நிலை யில், நீதிமன்றம் மூலம் வழக்கு விவ காரத்தை திசை திருப்பி கடந்த வாரம்  6-ஆவது முறையாக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. சம்  மனில் கெஜ்ரிவால் திங்களன்று (பிப்.  19) ஆஜராகுமாறு கூறப்பட்டு இருந்த  நிலையில், 6-ஆவது சம்மனையும் கெஜ்ரிவால் புறக்கணித்தார். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி வெளி யிட்டுள்ள அறிக்கையில்,”தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறையின் தொடர் சம்மன் சட்டவிரோதமானது. கெஜ்ரி வாலுக்கு மீண்டும் மீண்டும் சம்மன்  அனுப்புவதற்கு பதிலாக நீதிமன்  றத்தின் முடிவுக்காக அமலாக்கத் துறை காத்திருப்பது நல்லது” என கூறப்பட்டுள்ளது.