புதுதில்லி, பிப். 9 - முன்னாள் பிரதமர்கள் பி.வி. நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் குடிமக்களுக்கு வழங் கப்படும் உயரிய விருது பாரத ரத்னா. அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் என எந்தவொரு துறை யிலும் உயரிய சேவை புரிந்தவர் களுக்கு உயர்ந்தபட்ச அங்கீகாரமாக பாரத ரத்னா விருது உள்ளது.
மறைந்த பீகார் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு 2024 ஜனவரி 23 அன்று பாரத ரத்னா விருது அறிவிக்கப் பட்டது. பிப்ரவரி 3 அன்று முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி க்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப் பட்டது.
இந்த வரிசையில், முன்னாள் பிரத மர்கள் பி.வி. நரசிம்ம ராவ், சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆகிய மேலும் 3 பேருக்கு, வெள்ளியன்று (பிப்ரவரி 9) பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
2 மாதத்திற்குள் 5 பேருக்கு பாரத ரத்னா
ஒன்றிய பாஜக அரசு கடந்த 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் மொத்தம் 7 பேருக்கு பாரத ரத்னா விருதை வழங்கியுள்ளது. இதில், மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஆண்டான 2024-இல் மட்டும் 5 பேருக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவர்களில் எல்.கே. அத்வானி தவிர, மற்ற அனைவருக்கும் அவர் களின் மறைவுக்கு பிறகு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் மற்றும் சோசலிஸ்ட் கட்சித் தலை வர்களாக இருந்தாலும், மக்கள வைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை மனத்தில்கொண்டு பாரத ரத்னா விருதுகளை அறிவித்துள்ளது.
தேர்தல் கணக்குகளுடன் விருது அறிவிப்பு
பீகாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு மூலம் இந்தியா கூட்டணி செல் வாக்கு பெற்றுள்ள நிலையில், அத னைச் சமாளிப்பதற்காக கர்பூரி தாக்கூ ருக்கு விருது அறிவித்த பாஜக, உத்தரப் பிரதேசத்தில் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியை கூட்டணிக் குள் கொண்டுவரும் விதமாக அக்கட்சி யின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி-யின் தாத்தாவும்- 170 நாட்கள் பிரதமர் பத வியை வகித்தவருமான சவுத்ரி சரண் சிங்-கிற்கு பாரத ரத்னா அறி வித்துள்ளது. ஆந்திர சட்ட மன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதால், அம்மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவுக்கு விருது அறிவித்துள்ளது.