india

img

காரில் தொங்கியபடி தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய மோடி

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை அரசியல்  ஆதாயப் பொருளாகவும், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் மாற்ற பாஜக தீவிர மாக முயற்சித்து வரும் நிலையில், பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு முன்ன தாகவே தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். 

ராமர் கோவில் அமைந்து இருக் கும் அயோத்தியில் வளர்ச்சிப் பணி  என்ற பெயரில் ரூ.15,700 கோடி மதிப் புள்ள திட்டங்களை பிரதமர் மோடி சனியன்று தொடங்கி வைத்தார். ரூ. 1,450 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள மகரிஷி வால்மீகி சர்வதேச  விமான நிலையம், ரூ.240 கோடி செல வில் மறுசீரமைக்கப்பட்ட “அயோத்தி தாம்” சந்திப்பு ரயில் நிலையம், இரண்டு புதிய அம்ரித் பாரத் ரயில்கள், 6 புதிய  “வந்தே பாரத் ரயில்கள்” உள்ளிட்ட வைகளை மோடி திறந்து வைத்தார்.

பிரச்சார “ரோடு ஷோ”

திட்டங்களை துவக்கி வைத்தப்  பின் பிரதமர் மோடி அயோத்தியில் சாலை மார்க்கமாக “ரோடு ஷோ”  சென்றார். அதுவும் எஸ்பிஜி வீரர்கள் போல காரில் வெளிப்புறமாக தொற் றிக் கொண்டு கையசைத்தவாறே பிர தமர் மோடி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை அயோத்தி ராமர் கோவில் திறப்புவிழாவிற்கு முன்பே தொடங்கி விட்டார்.

காவி வண்ண தொப்பிகளை மாணவர்களுக்கு அணிவித்து மோடி ஷூட்டிங்

அயோத்தி நலத்திட்டங்கள் என்ற பெயரில் 2 புதிய அம்ரித் பாரத் ரயில்கள், 6 புதிய “வந்தே பாரத் ரயில்கள்” என 8 ரயில்களை பிரதமர்  மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக காவி வண்ணத்தில் உருவாக்கப்பட்டு இருந்த “அம்ரித் பாரத்” ரயிலுக்குள் சென்ற மோடி  மாணவர்களை வைத்து தனி ஷூட்டிங் செட் ஏற்  பாடு செய்து இருந்தார். அதாவது மாணவர் களுக்கு காவி தொப்பிகளை அணிய வைத்து அவர்களிடம் ஒரு துண்டு சீட்டை கொடுத்து அதனை படிக்க வைத்து பிரதமர் மோடி சொல்வதை மாண வர்கள் கேட்பது போல ஷூட்டிங் நடத்தப்பட்டது.