india

img

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் பிரச்சனை

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருடன் கருத்து வேறுபாட்டால் தான் அருண்  கோயல் ராஜினாமா செய்துள்ள தாக தகவல்கள் வெளியாகியுள் ளன. 

இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சை வெளியாகி வரும் நிலை யில், சிவசேனா, தேசியவாத காங்  கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரச்ச னையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் முடி வுகளே அருண் கோயல் பதவி விலக காரணம் என தகவல் வெளி யாகியுள்ளது.

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்
மகாராஷ்டிராவில் சிவசேனா வை இரண்டாக உடைத்து, அக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சில எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி மகா கூட்டணி  ஆட்சியை (காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், சிவசேனா) கவிழ்த்தது பாஜக. ஏக்நாத் ஷிண்டே தற்போது மகாராஷ்டிரா வின் முதல்வராக உள்ளார். இதே போன்று துணைமுதல்வர் பதவி  அளித்து சரத் பவாரின் அண்ணன்  மகனான அஜித் பவார் மூலம்  தேசியவாத காங்கிரஸ் கட்சியை  உடைத்தது பாஜக. கட்சி இரண் டாக உடைந்ததால் சிவசேனா மற்  றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி யின் பெயர் மற்றும் சின்னம் யாருக்கு  என்பதில் குழப்பம் ஏற்பட்டது.

இதுதொடர்பான விவகா ரத்தில் கட்சியில் அமைப்பு ரீதியாக  எந்த பிரிவுக்கு ஆதரவு உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்ற முந்தைய நடை முறையை பின்பற்றாமல் பெரும்  பான்மை எம்எல்ஏக்கள், எம்பிக் கள் ஆதரவு விகிதத்தை மட்டும்  கணக்கில் கொண்டு சிவசேனா  கட்சியை உடைத்த ஷிண்டேவிட மும், தேசியவாத காங்கிரஸ் கட்சி யை உடைத்த அஜித் பவாரிட மும் கட்சியின் பெயர் மற்றும் சின்  னத்தை இந்திய தேர்தல் ஆணை யம் ஒப்படைத்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலை யில், சிவசேனா - தேசியவாத காங்  கிரஸ் கட்சியின் பிரச்சனையில் ஜனநாயகத்துக்கு விரோதமாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் முடிவு வழங்கிய தன் காரணமாகவே தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது  பதவியை ராஜினாமா செய்துள்ள தாக தகவல்கள் வெளியாகியுள் ளன.