நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் இரண்டாவது மிகப்பெரிய விருதான அர்ஜுனா விருது 17 பேருக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி செவ்வாயன்று தில்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைசாலி, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உள்ளிட்ட 17 பேருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அர்ஜுனா விருதை வழங்கினார். இதேபோல தியான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் செவ்வாயன்று வழங்கப்பட்டன.