பதற்றத்தால் அமித் ஷா அவசர ஆலோசனை
பாஜக மூத்த அமைச்சர்களுடன் ஒன்றிய உள்துறை அமைச் சர் அமித் ஷா வியாழக் கிழமை மாலை அவ சர ஆலோசனை நடத் தினார். பாஜக தேசிய தலைவர் நட்டா, ஒன்றிய அமைச்சர் கள் பியூஷ் கோயல், சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட் டத்தில் பங்கேற்றனர். அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் சர்ச்சை பேச்சு குறித்தும், நாடாளுமன்ற வளாகத்தில் “இந்தியா” கூட்டணி மற்றும் ஆளும் கட்சி எம்.பி.,க்கள் இடையே நடந்த தள்ளு முள்ளு குறித்தும் ஆலோசனை மேற் கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி யுள்ளது.
ஜகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த மோடி அரசு
மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் மீது ஒரு தலைப்பட்சமாக செயல் படுவதாக குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. 14 நாட்கள் அவகாசம் அளித்து நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட வேண்டும். நடப்பு குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 20ஆம் தேதியுடன் முடி வடைவதால் நோட்டீஸ் அளிக்க 14 நாட் கள் அவகாசம் இல்லை. 14 நாள் அவ காசம் இல்லாததால் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் நிராகரிக்கப்படுவ தாக மாநிலங்களவை செயலகம் அறி வித்துள்ளது.
அமித் ஷா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்
அம்பேத்கரை அவமதிக்கும் வகை யில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதற்காக தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை போ ராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள் ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் அமை ப்பு பொதுச் செய லாளர் கே.சி.வேணுகோபால் விடுத் துள்ள அறிக்கையில்,“எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் “இந்தியா” கூட்டணி கட்சிகள் தலைமையில், பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து, நாடாளு மன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் கடந்த 15 நாட்களாக அமைதியான முறை யில் போராட்டம் நடத்தி வருகின்றனர். எந்தவித இடையூறும் ஏற்பட்டதாக எந்தச் சம்பவமும் பதிவாகவில்லை. ஆனால் வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேர்னா ஸ்தாலில் நாங்கள் நடத்திய அமைதியான போ ராட்டத்திற்குப் பிறகு, அவைக்குள் செல்ல முயன்றோம். ஆனால் பாஜக எம்.பி.,க்கள் காங்கிரஸ் தலைவர் கார்கேவை தள்ளினார்கள். இது ஒரு வெட்கக்கேடான சம்பவம். அதே நேரத் தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அவைக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி கூச்சலிட்டனர். அம்பேத்கருக்கு எதிராக அமித் ஷா கூறிய இழிவான கருத்துக்களுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். இதுபோன்ற எந்த ஒரு நாடகம் அல்லது சூழ்ச்சியும் பொறுப்பிலிருந்து காப்பாற்ற முடி யாது. உள்துறை அமைச்சர் தனது கருத்துக்காக ராஜினாமா செய்யும் வரை இந்த பிரச்சனையை நாடு முழுவதும் வீதிக்கு கொண்டு செல்வோம். அம் பேத்கருக்கு ஆதரவாக நிற்பதால் வழக்கு களை எதிர்கொள்ள வேண்டும் என்றால், ஒவ்வொரு வழக்கையும் மகிழ்ச்சியுடன் சந்திப்போம்” என அதில் கூறப் பட்டுள்ளது.