india

img

ஜன 27-க்குள் வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு

புதுதில்லி, ஜன. 13 - தமிழக மழை - வெள்ளப் பாதிப்புக்கு, ஜனவரி 27-க்குள் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக எம்.பி.க்களிடம் உறுதியளித்துள்ளார். மிக்ஜம் புயல் மற்றும் குமரிக் கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை - வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது.

 இந்நிலையில் தமிழக மழை வெள்ளப் பாதிப்பை இயற்கைப் பேரிடராக அறிவித்து, ரூ. 37 ஆயிரத்து 907 கோடியே 19 லட்சம் நிவாரண நிதி ஒதுக்கீடு வேண்டும் என்று  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத் தார். கடிதங்கள் மூலமும் வலியுறுத்தி னார். எனினும், இதுவரை ஒன்றிய அரசு நிவாரணம் எதையும் வழங்கா மல் உள்ளது.

மறுபுறத்தில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக வெள்ளப் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில், தமிழக அரசின் மழை - வெள்ளப் பாதிப்புக்கு உடனடி யாக நிவாரண நிதியை ஒதுக்கீடு  செய்ய வலியுறுத்தி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து முறையிடுவதென தமிழ் நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு முடிவு செய்தது. அதற்காக  நேரம் கேட்கப்பட்டிருந்தது.  

அதன்படி சனிக்கிழமையன்று பிற்பகல் 3.30 மணியளவில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அமித்ஷாவை அவரது இல்லத்தில் தமிழக எம்.பி.க்கள் சந்தித்தனர். இந்த  சந்திப்பில் டி.ஆர். பாலு (திமுக), ஜெயக்குமார் (காங்கிரஸ்), வைகோ (மதிமுக), கே. சுப்பராயன் (சிபிஐ), சு. வெங்கடேசன் (சிபிஎம்), டி. ரவிக் குமார் (விசிக), நவாஸ் கனி (முஸ்லிம் லீக்), சின்ராஜ் (கொங்குநாடு மக்கள் கட்சி) ஆகிய 8 பேர் பங்கேற்ற நிலை யில், அவர்கள், மழை - வெள்ள நிவா ரண நிதியாக தமிழக அரசு கோரி யிருக்கும் ரூ. 37 ஆயிரத்து 907 கோடியை விரைந்து வழங்குமாறு அமித்ஷாவிடம் வலியுறுத்தினர்.

பின்னர் திமுக நாடாளு மன்றக்குழுத் தலைவர் டி.ஆர். பாலு, செய்தியாளர்களைச் சந்தித்தார். “ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து தமிழ்நாடு வெள்ள பாதிப்பு தொடர் பாக விரிவான அறிக்கை வழங்கப் பட்டது. உடனடியாக நிதியை வழங்க வேண்டும் என்ற முதலமைச்சரின் கடி தத்தை உள்துறை அமைச்சரிடம் அளித் தோம்.

மூன்று மத்தியக் குழுக்கள் தமிழ்நாட்டில் ஆய்வு செய்துள்ளது. இதன்மீதான அறிக்கையை ஜனவரி 21 வாக்கில், மத்தியக் குழு சமர்ப்பிக் கும் என அமித் ஷா தெரிவித்தார். அவ் வாறு அறிக்கை வழங்கிய பின்னர் உள்துறை, வேளாண் துறை, நிதித் துறை ஆகிய துறைகளை சார்ந்த அதி காரிகள் அறிக்கையை ஆய்வுசெய்து எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என பரிந்துரை செய்வர். அந்த பிறகு நிதி விடுவிக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் உத்தரவாதம் அளித்தார்” என்று தெரிவித்தார். மேலும், “ஒன்றிய அரசு தமிழ் நாட்டைப் புறக்கணிக்கவில்லை. மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்துள்ளோம்; தமிழ் நாட்டிற்கு நிதியை விடுவிப்போம்” என அமித் ஷா கூறியதாகவும், “சந்தி ப்பு மிக நிறைவாக இருந்தது; 27ஆம் தேதிக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு நிவா ரணம் வழங்கப்படும் என்று அமித் ஷா உறுதியளித்துள்ளார்” எனவும் டி.ஆர். பாலு கூறினார்.