சின்ன செய்திகளுக்கும் கூட ‘‘இப்பவே கண்ணக் கட்டுதே’’ என்ற கமெண்ட்டைக் கேட்க முடியும். முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் (Pre Wedding Celebration) மார்ச் முதல் வாரத்தில், குஜராத் மாநிலம், ஜாம் நகரில் நடந்தது. அதன் விவரங்களைக் கேட்டால், கண்ணைக் கட்டுவதும் மட்டுமல்ல; உடலே நடுங்குகிறது. அந்த கொண்டாட்டத்தின் செலவு சுமார் ரூ.1250 கோடி. தி மிண்ட் இணைய இதழ் ரூ.200 கோடி உணவுச் செலவிற்காக என மதிப்பீடு செய்கிறது.
2024 ஜூலை 12-ல் தான் திருமணம் நடக்க உள்ளது. அதற்கு நிச்சயம் மேற்குறிப்பிட்ட தொகையை விடவும் கூடுதலாக செலவு இருக்கும். ‘‘பல் இருப்பவர் பட்டாணி தின்கிறார்’’ என கடந்து செல்லும் செய்தி அல்ல. நாம் பேரரசர்கள் குறித்து அறிந்து இருக்கிறோம். அதை விடவும் கூடுதல் செல்வாக்கை, மக்களாட்சிக் காலத்தில், முதலாளித்துவப் பேரரசர்களால் நிகழ்த்த முடிகிறது. இதையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நெறியற்ற முதலாளித்துவம் (குரோனி கேப்பிட்டலிசம்) அதாவது, கூட்டுக் களவாணி முதலாளித்துவம் என்கிறது
சர்வதேச விமான நிலையம்
இந்த கொண்டாட்டத்திற்காக ஜாம்நகர் விமான நிலையத்தை, பாஜக அரசு சர்வதேச விமான நிலையம் என 10 நாள்களுக்கு அறிவிப்பு செய்தது. அம்பானியின் சொத்து மதிப்பு 23.1 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.1,91,730 ஆயிரம் கோடி) இந்த தொகை, 19 நாடுகளின் ஜி.டி.பி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) ஐ விடவும் அதிகம் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறுகிறது.
இவ்வளவு சொத்து மதிப்பு கொண்டுள்ள, ஒரு நபரின் தேவைக்காக ஜாம்நகர் விமான நிலையத்தை 10 தினங்கள் சர்வதேச விமான நிலையமாக விதிகளை மீறி அறிவித்தது சரிதான் என சிலர் கூறுவதையும் கேட்க முடிகிறது. கூடவே இக்கொண்டாட்டத்திற்கு வருகை தந்தவர்கள் பட்டியலில் பில்கேட்ஸ், மார்க் ஜூகர்பெர்க், இவாங்கா டிரம்ப் (டிரம்ப்பின் மகள்) இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியல் இந்திய ஆட்சியாளர்களை, தானாகவே முன் வந்து வசதி வாய்ப்புகளை செய்து கொடுக்க, அழுத்தம் தரும் என்பதை புரிந்து கொள்ள முடியும். பல நாடுகளில் உள்ள பிரமுகர்கள் வருகை தந்தாலும், நம் ஊர் திரைக்கலைஞர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இவ்வளவு சொத்து மதிப்பு கொண்டுள்ள, ஒரு நபரின் தேவைக்காக ஜாம்நகர் விமான நிலையத்தை 10 தினங்கள் சர்வதேச விமான நிலையமாக விதிகளை மீறி அறிவித்தது சரிதான் என சிலர் கூறுவதையும் கேட்க முடிகிறது. கூடவே இக்கொண்டாட்டத்திற்கு வருகை தந்தவர்கள் பட்டியலில் பில்கேட்ஸ், மார்க் ஜூகர்பெர்க், இவாங்கா டிரம்ப் (டிரம்ப்பின் மகள்) இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியல் இந்திய ஆட்சியாளர்களை, தானாகவே முன் வந்து வசதி வாய்ப்புகளை செய்து கொடுக்க, அழுத்தம் தரும் என்பதை புரிந்து கொள்ள முடியும். பல நாடுகளில் உள்ள பிரமுகர்கள் வருகை தந்தாலும், நம் ஊர் திரைக்கலைஞர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
பில்லியன் டாலர் வளர்ந்தது எப்படி?
ஜாம்நகர் சர்வதேச விமான நிலையத்திற்காக, முகேஷ் அம்பானி சொத்துகளையும், உலக பிரமுகர்களையும் சுட்டிக் காட்டும் நபர்கள் அந்த சொத்துகள் எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்புவதில்லை. 35 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய தொழில் அதிபராக எவ்வாறு வர முடிந்தது? ஒன்று அரசு அளிக்கும் சலுகைகள்; இரண்டு, பொதுத்துறை வங்கிகள் அளிக்கும் கடன், அதை தொடர்ந்து வழங்கும் தள்ளுபடி; மூன்று, பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் உழைப்பு.
உதாரணத்திற்கு, முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு சொந்தமாக ஜாம்நகரில் 280 ஏக்கரில் ஒரு மிருகக் காட்சி சாலை உள்ளது. ரிலையன்ஸ் என அதற்கு பெயரும் சூட்டப்பட்டுள்ளது. வண்டலூர் மிருகக் காட்சி சாலையை விட குறைவு என ஒப்பிடுவதை விட, சிங்க பொம்மை வாங்கி தர சிரமப்படும் மனிதர்களுக்கு மத்தியில், அம்பானி தன் குழந்தைகளுக்கு அசல் மிருகங்களையே காட்சிப்படுத்தியுள்ளார் என ஒப்பிடுவதே, இன்றைய இந்தியாவின் ஏற்ற இறக்கத்தையும், சமத்துவமற்ற தன்மைகளையும் சரியாக புரிந்து கொள்ள உதவும்.
விளம்பரத் தூதுவரான மோடி
அடுத்து ஜியோ நெட்வொர்க்; இந்த நிறுவனம் 2015ல் துவங்கப்பட்டது. அதற்கு முன் செல்போன் கருவி விற்பனையை மட்டும் நடத்தி வந்த நிறுவனம், செல்போன் பயனை அனுபவிக்கத் தேவையான நெட் வொர்க் பொறுப்பு, ரிலையன்ஸ் குழுமத்திற்கு கிடைத்தது. இப்போது இந்த நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, ஒட்டு மொத்த செல்போன் வாடிக்கையாளர்களில் 46.2 கோடிப் பேர் ஆவர். இது சுமார் 50 சதம் ஆகும். துவங்கும் போதே 4ஜி சேவை, என்ற அறிமுகத்தை பிரதமர் மோடி வழங்கினார். அதுமட்டுமல்ல, மோடி இந்த நிறுவனத்தின் விளம்பரங்களிலும் இடம்பெற்றார். ஜியோ குழுமம், பிரதமரை தனக்கு விளம்பர தூதுவராக பயன்படுத்தி கொண்டது.
இதன் மூலம் அப்பட்டமாக அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்-க்கு அந்த சேவையை வழங்க இன்று வரை மறுத்து வருகிறது. ஆனால் ஜியோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு 5ஜி சேவை வரையிலும் அனுமதி வழங்கி, செல்வ வளத்தை அதிகரிக்க பாஜக அரசு உதவியுள்ளது. அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை, மோடி தனது செயல்கள் மூலம் ஜியோ வாடிக்கையாளர்களாக மடைமாற்றம் செய்துள்ளார்.
மிண்ட் இணைய இதழின் (5.4.2023) செய்திப்படி, 55 வங்கிகள் மூலம் முதலில் 3 பில்லியன் டாலர் கடனும், அதைத் தொடர்ந்து 18 வங்கிகள் மூலம் 2 பில்லியன் டாலர் கடனும் என மொத்தம் 5பில்லியன் டாலர் கடன், ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் பெற்றுள்ளது. தி எக்னாமிக் டைம்ஸ் இதழ் 1,61,035 கோடி ரூபாய் என குறிப்பிடுகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாஜக அரசு கடன் தள்ளுபடி அறிவிப்பை வழங்கி வருகிறது. அறிவிக்கப்படும் தொகையின் அளவும் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவதைக் காண முடிகிறது. தி இந்து நாளிதழ் கடந்த 10 ஆண்டுகளில் ரூ 10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளதாக செய்தி வெளியிட்டு உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அம்பானியின் பங்களிப்பு, சுமார் 8 சதம் என மதிப்பிடப்படுகிறது. அநேகமாக இது கடன் பெறுவதிலும், கடன் தள்ளுபடி அனுபவிப்பதிலும் கூட பிரதிபலிக்கும் என்பதே உண்மை.
தேர்தல் பத்திரங்களுடன் என்ன தொடர்பு?
தேர்தல் பத்திரங்கள் அளிக்கும் நபர்களின் பெயர்களும் விவரங்களும் ரகசியமாக வைக்கப்படும் என்ற அரசு முடிவை மேலே கண்ட தனி நபர்களான தொழில் அதிபர்களுக்கான சலுகையுடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, தேர்தல் பத்திரம் வழங்கிய நபர்கள் அல்லது நிறுவனங்கள் குறித்த விவரங்களை அளிக்க தாமதம் செய்வது, இந்த தேர்தல் நேரத்தில் பாஜகவின் மீது வளரும் அதிருப்தியை அதிகரிக்காமல் இருக்கும் உள் நோக்கம் கொண்டது என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்து சரியானது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
குறிப்பாக தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் வெளிவரும் போது, கடன் சலுகை அல்லது தள்ளுபடி சலுகை பெற்ற நிறுவனங்கள் அம்பலமாகும். 125 நாடுகள் கொண்ட வறுமை சார் பட்டியலில் இந்தியா 111 வது இடத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட நாட்டில் அம்பானி குடும்பத்தினர், திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தை 1250 கோடி ரூபாய் செலவில் நடத்துவது, கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
குறிப்பாக தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் வெளிவரும் போது, கடன் சலுகை அல்லது தள்ளுபடி சலுகை பெற்ற நிறுவனங்கள் அம்பலமாகும். 125 நாடுகள் கொண்ட வறுமை சார் பட்டியலில் இந்தியா 111 வது இடத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட நாட்டில் அம்பானி குடும்பத்தினர், திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தை 1250 கோடி ரூபாய் செலவில் நடத்துவது, கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
ஆனால் கார்ப்பரேட் முதலாளிகள் எளிய மக்களுக்கு வழங்கும் சில அடிப்படைத் தேவைகளை, கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். குறிப்பாக பாஜகவினர், இலவசத் திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கிறது என்ற பெயரில் வழக்குகளைத் தொடர்ந்து, மக்களையும், மக்கள் நலத் திட்டங்களையும் இழிவுபடுத்துகின்றனர். உதாரணத்திற்கு மகளிர் உரிமைத் திட்டத்திற்கு, ஒரு கோடியே 10 லட்சம் பேர் பயனடைய, ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடி செலவாகும் என்றால், 10 அல்லது 20 கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் தள்ளுபடி ஆவதை விமர்சிப்பதில்லை.
பாஜகவின் இந்த கார்ப்பரேட்-களவாணித்தன அரசியலை அம்பலப்படுத்துவது மிக அவசியமாகும்.