india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வேட்பாளர்  பட்டியலை வெளியிட்ட அகிலேஷ்
லக்னோ, ஜன. 30 - 2024 மக்களவைத் தேர் தலுக்கு, ‘இந்தியா’ கூட் டணியில் நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரப்பிரதேசத் தில் தொகுதிப் பங்கீடு நடந் துள்ளது. முதற்கட்டமாக காங்கிரஸுக்கு 11 தொகுதி களையும், ராஷ்ட்ரீய லோக்  தளத்துக்கு 7 தொகுதிகளை யும் சமாஜ்வாதி கட்சி ஒதுக் கியுள்ளது. இந்த நிலையில், சமாஜ்வாதி போட்டியிடும் 62 தொகுதிகளில் முதற் கட்டமாக 16 தொகுதிகளுக் கான வேட்பாளர் பட்டியலை யும் அதன் தலைவர் அகி லேஷ்  செவ்வாயன்று வெளி யிட்டுள்ளார்.

2 மாதத்திற்குள் 3-வது முறை பிரதமர் வருகை 
திருப்பூர், ஜன. 30 - மக்களவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பிப்ரவரி 18  அன்று தமிழ்நாடு வருகிறார். பல்லடத்தில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க உள்ளதாக அறி விக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பிரதமர் மோடி, கடந்த 2 மாதங்களில் 3-ஆவது முறையாக தமிழகம் வர வுள்ளார். ஜனவரி 2 அன்று திருச்சி வந்த பிரதமர் மோடி, ஜனவரி 19, 20, 21 ஆகிய 3 நாட்களிலும் சென்னை, ஸ்ரீரங்கம், இராமேஸ்வரம் என பயணம் மேற்கொண்டார்.

ஜூன் 9-இல் குரூப்- 4 தேர்வு
சென்னை, ஜன. 30 - தமிழ்நாடு அரசின் பல் வேறு துறைகளில் உள்ள, 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியிலான 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற் கான குரூப்- 4 தேர்வு  ஜூன் 9 அன்று நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியா ளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைனில் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப் பூர்வ இணையதளம் மூல மாக பிப்ரவரி 28 வரை  விண்ணப்பிக்கலாம்.             

இம்ரான்கானுக்கு 10 ஆண்டு சிறை
புதுதில்லி, ஜன. 30 -  பாகிஸ்தான் பிரதமராக  இம்ரான் கான் இருந்த போது அமெரிக்க தூதரகம் வாயிலாகப் பெறப்பட்ட ரக சியங்களை பகிரங்கப் படுத்தியதாக புகார் எழுந்தது. இது நாட்டின் அதி காரப்பூர்வ ரகசியச் சட்டம் மீறி நடவடிக்கை என வழக்கு தொடரப்பட்டது. இந்நிலை யில், சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவ ரது ஆட்சிக் காலத்தில் வெளி யுறவு அமைச்சராக இருந்த ஷா மஹ்மூத் குரேஷி ஆகி யோருக்கு தலா 10 ஆண்டு கள் சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாடு  ஊர்திக்கு பரிசு!
சென்னை, ஜன. 30 - குடியரசு தின விழா  அணி வகுப்பில், குடவோலை முறையின் சிறப்பை விளக் கும் வகையில் பங்கேற்ற தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. ஒடிசா முதலிடத்தையும், குஜராத் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.