நீட் தேர்வு முறைகேடு விவகா ரத்தை விவாதிக்கும் வகை யில் நாடாளுமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானத்தை கொண்டு வர “இந்தியா” கூட்டணி கட்சியி னர் முடிவு செய்தனர். இந்த ஒத்தி வைப்பு தீர்மானத்தை மக்களவை இணையதளத்தில் சமர்ப்பிக்க வியாழனன்று இரவு “இந்தியா” கூட்டணி ஆயத்தமாகியது. இந் நிலையில், மக்களவை இணைய தளத்தில் சமர்ப்பிக்கும் விருப் பத்தை (SUBMIT) மோடி அரசு முடக்கி வைத்தது. இதனால் “இந்தி யா” கூட்டணியின் ஒத்திவைப்பு தீர் மானம் மக்களவை இணையதளத் தில் பதிவேற்றம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனாலும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் இணைந்து கைப்பட எழுதி மக்க ளவை செயலகத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை சமர்ப்பித்தனர். எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மா னத்தை சமர்ப்பிக்க முடியாதபடி மக்களவை இணையதளத்தை முடக்கிய மோடி அரசுக்கு “இந்தி யா” கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் இந்தியாவிற்கே
இந்த நிலைமையா? : மாணிக்கம் தாகூர்
மக்களவை இணையதளத்தை முடக்கிய மோடி அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பி னர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரி வித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகையில், ”ஒத்தி வைப்பு தீர்மானத்தை பதிவேற்றும் மக்களவை இணையதளம் முடக்கப்பட்டுள் ளது. டிஜிட்டல் இந்தியாவிற்கே இந்த நிலைமையா? முக்கியமான விவாதங்களை முன்வைக்கவே நாடாளுமன்றம். அரசை புகழ்வதற்காக அல்ல” எனக் கூறினார்.
ஒன்றிய அமைச்சர் விளக்கம்
அளிக்க வேண்டும் : சு.வெங்கடேசன் எம்.பி.,
எதிர்க்கட்சிகள் நீட் ஒத்திவைப்பு தீர்மானத்தை மக்களவை இணையதளத்தில் பதிவேற்ற முடியாதபடி தடுக்கும் நோக்கத்தில் மோடி அரசு செயலாற்றியுள்ளது அம்பலமாகி யுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாடா ளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ விளக்கம் அளிக்க மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோ ரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “நீட் தேர்வு குறித்து எதிர்க்கட்சிகள் ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுக்க முடிவெடுத்த பின் வியாழன் முதல் எங்களின் மின்னஞ்சல் வசதிகள் காலாவதியாகிவிட்டதாகச் சொல்லி முடக்குவது தான் பாஜகவின் ஜனநாயக மரபு. இந்தச் செயலுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பொறுப்பேற்று விளக்கம் அளிக்க வேண்டும்”எனக் கூறியுள்ளார்.