india

img

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ளக்கூடாது: யுஜிசி சுற்றறிக்கை!

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த மே மாதம் நடந்த சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், அனைத்து கல்வி நிலையங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இதுவரை வெளிவராத நிலையில், கல்லூரி மாணவர் சேர்க்கையை முன்பே முடித்துக்கொள்ளக் கூடாது. 

மேலும், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, உரிய கால அவகாசம் வழங்கி மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும் என தெரிவித்துள்ளது.

;