india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இந்திய கடற்படை தளபதியாக இருந்த ஹரிஷ் குமாரின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய தளபதியாக அட்மிரல் தினேஷ் திரிபாதி செவ்வாயன்று பதவியேற்றுள்ளார்.

“பயங்கரவாதிகள் 111” என அழைக்கப்படும் குழுவிடமிருந்து வந்த மிரட்டல்  மின்னஞ் சல் காரணமாக, நாடு முழுவதும் உள்ள 24 விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாபில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி குரீந்தர் சிங் தில்லான் விருப்ப ஓய்வுபெற்று செவ்வா யன்று காங்கிரஸில் இணைந்தார்.

கேரள மாநிலம் கண்ணூரில் செவ்வாயன்று அதிகாலை கேஸ் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி, கார் மீது மோதிய விபத்தில் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாப மாக உயிரிழந்தனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற விருக்கும் ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, பி.வி.சிந்து உள்பட 7 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

பதஞ்சலி நிறுவனம் தயாரிக்கும் 14 ஆயுர்வேத மருந்துகளின் உற்பத்தி உரிமத்தை பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தின் மருத்து ஒழுங்கு முறை ஆணையம் ரத்து செய்துள்ளது.

இமயமலைச் சாரலில் உள்ள ஜம்மு - காஷ்மீ ரில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அங்கு வெள்ளப்பெருக்கால் மூன்று சிறுவர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 350 குடும்பத்தினர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஆபாச வீடியோக்கள் சர்ச்சை தொடர்பாக மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் பிரஜ்வால் ரேவண்ணா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச் சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வாகனப் பயன்பாடுகளுக் கான இயற்கை எரிவாயுவின் (சிஎன்ஜி) இருப்பு பற்றாக்குறை காரணமாக கடும் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. இதனால் பல்வேறு சிஎன்ஜி பம்புகளில் வாகனங்களில் நீண்ட வரிசையில் காத்து இருந்து, எரிபொருளை நிரப்பிச் செல்கின்றனர். 

நவீனங்கள் வளர்ந்து விட்ட பொழுதிலும் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் தேர்தல் வேட்பா ளர்களைத் தேர்ந்தெடுப்பதில் சாதியே இன்னும் முக்கிய காரணியாக உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

ராய்ப்பூர்
சத்தீஸ்கரில் 7 பேர் சுட்டுக்கொலை

பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநி லத்தில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக் கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வரு கின்றனர்.

இந்நிலையில் நாராயண்பூர் மற்றும் கன்கர் மாவட்டங்களின் எல்லையை யொட்டி வனப்பகுதியில் நக்சலைட்டு கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகவும் அதை யடுத்து செவ்வாயன்று காலை மாநில சிறப்பு தனிப்படை, நக்சலைட்டுகள் பதுங்கி இருந்ததாகக் கூறப்படும் இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய தாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத் தில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

புதுதில்லி
தேர்தலுக்கு முன் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?
அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

ஆம் ஆத்மி ஆளும் தில்லி மாநிலத்தில் முதல்வராக அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். தில்லி யில் ஆட்சியை கலைக்கும் முனைப்பி லும், மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்காமல் தடுக்கவும் மோடி அரசு அமலாக்கத்துறை மூலம் முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில், தனது கைதை எதிர்த்து கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு செவ்வாயன்று உச்சநீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அமலாக்கத்துறை, கெஜ்ரிவால் உள்ளிட்ட இருதரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “தேர்தலுக்கு முன் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? விசாரணை தொடங்கி யதற்கும் கைது நடவடிக்கைக்கும் இடை வெளி அதிகம். கெஜ்ரிவால் மீதான வழக்கில் சொத்து முடக்கம் போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தலுக்கு முன் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து வெள்ளிக் கிழமை அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்” என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.