புதுதில்லி, செப். 17 - தில்லியின் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய முதல்வராக அதிஷி மார்லெனா பதவியேற்க உள்ளார்
செவ்வாயன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பி னர்கள், அதிஷி மார்லெனாவை தங்களின் புதிய சட்டமன்றக்குழுத் தலைவராகவும், முதல்வராகவும் தேர்ந்தெடுத்து, அதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் வழங்கியுள்ளனர்.
தில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, மதுபான கொள்கை முறை கேட்டில் தொடர்பு இருப்பதாக கூறி, ஒன்றிய பாஜக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அமலா க்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை அமைப்புகள் வழக்கு தொடுத்தன. கைது நடவடிக்கையும் மேற்கொண்டு, கடந்த 6 மாத காலமாக தில்லி திகார் சிறையில் அடைத்தன.
அமலாக்கத்துறை வழக்கில் ஜூலை மாதமே ஜாமீன் கிடைத்தாலும், சிபிஐ கைது வழக்கு நிலுவையில் இருந்ததால் கெஜ்ரி வால் தொடர்ந்து சிறையிலேயே அடைக்கப் பட்டு இருந்தார்.
இந்நிலையில், சிபிஐ கைது செய்யப்பட்ட வழக்கில் செப்டம்பர் 13 அன்று கெஜ்ரிவா லுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உச்சநீதிமன்றம் தனது ஜாமீன் தீர்ப்பில், ‘முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக் கூடாது; ஆவணங்களில் கையெழுத்து போடக் கூடாது’ என பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது.
இதன் காரணமாக கெஜ்ரிவால், அடுத்த 2 நாட்களுக்குள் தில்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகஅறிவித்தார்.
புதிய முதல்வர் அதிஷி
அதன்படியே செவ்வாயன்று தில்லியில் உள்ள கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிய முதல்வர் பதவிக்கு மூத்த அமைச்சர் அதிஷி மார்லெனா பெயரை கெஜ்ரிவால் முன்மொழிந்தார். இதனை யடுத்து அதிஷி மார்லெனா ஒருமனதாக, புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து செவ்வாயன்று மாலை 5 மணி யளவில் கெஜ்ரிவால், தில்லி துணை நிலை ஆளுநரை சந்தித்து, முதல்வர் பதவியை ராஜி னாமா செய்யும் கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி மார்லெனா புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.