india

img

களத்தில் கைகோர்த்துப் பணியாற்றுங்கள்!

கொல்கத்தா, ஏப்.6- களத்தில் மக்கள் ஆதரவு பெருகு வதால், இடது முன்னணி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களோடு கைகோர்த்துப் பணியாற்றுங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க மாநிலத் தலைவர் ஆதிர் ரஞ்சன் ராய் சவுத்ரி வேண்டு கோள் விடுத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் கட்சிகளுக்கு எதிராக இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்துள்ளன. பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடப்பதால், மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் இது வரையில் 31 தொகுதிகளுக்கு வேட் பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. இந்த வேட்பாளர் களுக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளது. 

இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையில் கூடுதல் ஒருங்கிணைப்பு தேவை என்று இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கூட்டணிக்கு விரோதமாக நடப்பவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் உறுதி யளித்தனர். பிர்பும் தொகுதியில் ஏழு காங்கிரஸ் உறுப்பினர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள்.

கொல்கத்தாவில் உள்ள சில மக்களவைத் தொகுதிகளில் போட்டி யிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக இடது முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பிமன் போஸ் மக்களைச் சந்தித்து வாக்குகளைச் சேகரித்து வருகிறார். அதே போன்று, முர்சிதாபாத் மாவட்டத்தில் நல்ல ஒருங்கிணைப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது. அங்கு இரண்டு தொகுதிகளில் காங்கிர சும், ஒரு தொகுதியில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடு கின்றன. முர்சிதாபாத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது சலீம் போட்டியிடுகிறார்.

கூட்டாகப் பிரச்சாரம் செய்வது குறித்துக் கேட்டபோது, ஆமாம்., அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். முகமது சலீமுக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்யவிருக்கிறேன். எங்கள் கட்சிக் காரர்களும் முழுவீச்சில்  அங்கும், மற்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வார்கள் என்று ஆதிர்ரஞ்சன் ராய் சவுத்ரி தெரிவித்தார்.