india

img

ஆதார் திருத்தம் : புதிய கட்டுப்பாடுகள்

புதுதில்லி,நவ.10-  ஆதார் விதிகளில் தனிநபர் பிரத்யேக அடையாள ஆணை யம் திடீர் திருத்தம் செய்துள் ளது. இதன்மூலம், பெயர், பாலி னம், பிறந்த நாள் ஆகியவற்றில் ஒரு சில முறை மட்டுமே திருத்தங் களை செய்ய முடியும். இதுதொடர்பாக ஆதார் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:  ஆதார் அட்டையில் இனி பெயரை இரண்டு முறை மட்டுமே  மாற்ற இயலும். பிறந்த தேதியை ஒரு முறை மட்டுமே மாற்ற இயலும். ஆதார் அட்டைக்கு பதிவு செய்து கொள்ளும்போது பிறந்த தேதிக்குச் சான்றாக உரிய ஆவணம் இல்லாவிட்டால் தோராயமாக பிறந்த தேதி பதிவு செய்து கொள்ளப்படும். பின்னர் உரிய ஆவணங்களுடன் தனி நபர்கள் தங்களது பிறந்த தேதியை மாற்றிக் கொள்ளலாம். பாலினத்தை ஒரே ஒரு முறை திருத்திக் கொள்ளலாம் . ஒருவேளை அனுமதிக்கப் பட்ட எண்ணிக்கைக்கு மேல்  ஆதார் அட்டையில் திருத்தங் களைச் செய்ய வேண்டிய கட்டா யம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் பிராந்திய ஆதார் அலுவல கத்தை அணுக வேண்டும்  என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;