பிரபல மலையாள நடிகர் மோகன்லால் உடல் நலக்குறைவால் கேரள மாநிலம் கொச்சி யில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அதீத காய்ச்சல், மூச்சுத்திணறல், தசை வலி ஆகிய காரணங்களால் நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந் துள்ள நிலையில், திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் முக்கிய கோப்புகள் எரிந்து சேதமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசாவில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்தனர்; படுகாயம டைந்த 12 பேர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்
பள்ளிகளில் 1204 மாற்றுத்திறனாளிகள் பணி நியமனம்
அமைச்சர் வி.சிவன்குட்டி தகவல்
இடதுசாரி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளிகளில் 1204 மாற்றுத் திறனாளிகள் நியமிக்கப்பட்டுள்ள தாக கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி தெரி வித்தார். கோழிக்கோடு, மலப்புரம், வய நாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட் டங்களின் கல்வி அலுவலகங்களில் 2023 டிசம்பர் 31ஆம் தேதி வரை நிலுவை யில் உள்ள கோப்புகளுக்கு தீர்வு காணும் வடக்கு மண்டல சிறப்பு அதாலத்தை நடக்காவு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் அமைச்சர் துவக்கி வைத்தார். அப்போது அமைச்சர் மேலும் பேசுகை யில்,”இடதுசாரி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளிகளில் 1204 மாற்றுத்திற னாளிகள் நியமிக்கப்பட்டனர். வயநாடு மாவட்டத்திற்கான வட பிராந்திய அதா லத்தில் உதவி மையம் இருந்தாலும், பேரி டர் காரணமாக வயநாட்டிற்கு தனி அதா லத் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கல்வித்துறையில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு உடனடி முடிவு எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாநி லத்தை மூன்று மண்டலங்களாக பிரித்து கோப்பு அதாலத் நடத்தப்படுகிறது” என் றார் அமைச்சர்.
செயற்கை நுண்ணறிவு
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுப் பணித்துறை மற்றும் சுற்று லாத்துறை அமைச்சர் பி.ஏ.முகமது ரியாஸ் பேசுகையில்,”இந்தியாவில் கல் வித்துறையில் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் கேரளம் என்று சுட்டிக்காட்டினார். கல்வித் துறையில் கோப்புகள் மிகவும் சிக்கலா னவை. ஆனால், எர்ணாகுளம், கொல் லம் அதாலத்தில் நிலுவையில் இருந்த ஆயிரக்கணக்கான கோப்புகள் தீர்வு காணப்பட்டன. இது மிகவும் சாதகமான அணுகுமுறை. இடதுசாரி அரசாங்கத் தால் கல்வித்துறையில் 30,000 நிய மனங்கள் வழங்கப்பட்டது” என அமைச்சர் ரியாஸ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சுமார் பத்து ஆசிரி யர்களுக்கு பணி நியமன ஆணையை பொதுக்கல்வித்துறை அமைச்சர் நேரில் வழங்கினார். இதுதவிர, மலப்புரம், மங்கடா பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் ஓய்வூதியம் தொடர் பாக, 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, உத்தரவும் வழங்கப்பட்டது. கோழிக்கோட்டில் சனிக்கிழமை நடை பெற்ற அதாலத்தில் 1780 விண்ணப்பங் கள் பெறப்பட்டன. தனியார் முகவர்கள் பள்ளி மேலாண்மை சங்கம், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தை வழங்கியது.
புதுதில்லி
6 ஜேஎம்எம் எம்எல்ஏக்களுடன் சம்பாய் சோரன் தில்லியில் முகாம்
“இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் (ஜேஎம்எம் - ஹேமந்த் சோரன் கட்சி) மூத்த தலைவ ரும், முன்னாள் முதல்வருமான சம்பாய் சோரன் பாஜகவில் இணையவுள்ளதாக வும், அதற்காக அவர் தில்லியில் முகா மிட்டு இருப்பதாக கடந்த 3 நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. முதல்வர் பதவி ‘பறிக்கப் பட்டதால்’ ஏற்பட்ட அதிருப்தி காரண மாக சம்பாய் சோரன் மட்டுமின்றி அவரு டன் 6 ஜேஎம்எம் எம்எல்ஏக்களும் பாஜக வில் இணையவுள்ளதாக தகவல் வெளி யாகி வருகிறது. ஆனால் இதுகுறித்து பாஜகவோ, சம்பாய் சோரனோ தெளி வாக எந்த தகவலும் அளிக்கவில்லை.
மழுப்பல்
பாஜகவில் இணையவுள்ளதாக வெளியாகி வரும் தகவல் குறித்து சம்பாய் சோரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து செய்தியா ளர்களிடம் பேசிய சம்பாய் சோரன், “எனது மக்கள் இங்கே இருக்கிறார்கள். அதனால் என்னுடைய தனிப்பட்ட வேலை களுக்காகவே நான் தில்லி வந்துள்ளேன். வதந்திகள் பரப்பப்படுவது குறித்து எது வும் தெரியவில்லை” என கூறினார்.
திருவனந்தபுரம்
753 பேருக்கு ரூ.1.46 கோடி
வயநாடு நிலச்சரிவு பேரிடருக்கு விரைவான உடனடி நிதியுதவி
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வய நாடு மாவட்டத்தின் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதியில் கேரள மாநில அரசின் நிதியுதவி வழங்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. 753 நபர்களுக்கு 1.46 கோடி ரூபாய் (ரூ.1,46,10,000) வழங்கப்பட்டது. அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில் நிதி விநியோகம் முடிந்தது. இதில் வாழ்வா தாரத்தை முற்றிலும் இழந்த 617 பேருக்கு தலா ரூ.10,000 நிதி வழங்கப்பட்டது. மேலும் மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து 12 பேருக்கு ரூ.72 லட்சம் வழங்கப்பட்டது. உடல் நல்லடக்கம் செய்வதற்கு 124 பேருக்கு தலா ரூ 10,000 வழங்கப்பட் டது. பேரிடரில் காயமடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வரு பவர்களில் ஆவணங்களை சமர்ப்பித்த 34 பேருக்கும் நிதியுதவி வழங்குவ தற்கான நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி யுள்ளன.
ஜம்மு
மீண்டும் காங்கிரசுக்கு திரும்பும் குலாம் நபி ஆசாத்?
காங்கிரஸில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய குலாம் நபி ஆசாத் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் கட்சி யில் இருந்து விலகிய அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அடுத்த சில நாட்களில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் என்ற கட்சியை தொடங்கினார்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் சட்ட மன்ற தேர்தளுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், தனது கட்சியை தேர்த லுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியில் குலாம் நபி ஆசாத் இணைக்க உள்ள தாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால் செய்தி தொடர்பாளர் சல்மான் நிஜாமி இதனை மறுத்துள்ளார்.