india

img

எனது கணவர் இன்று நீதிமன்றத்தில் ஆதாரங்களோடு உண்மையை வெளியிடுவார்

மதுபானக் கொள்கை வழக்  குத் தொடர்பாக தில்லி  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21 அன்று அம லாக்கத்துறையால் கைது செய்  யப்பட்டார். இதனை கண்டித்து  ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள்,  தொண்டர்கள் 7 நாட்களாக தில்லி யில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். செவ்வா யன்று பிரதமர் இல்லத்தை முற்று கையிட்டும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், தில்லி மது பான முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் வியாழ னன்று தனது கணவர் நீதிமன் றத்தில் உண்மைகளை வெளி யிடுவார் என அரவிந்த் கெஜ்ரி வாலின் மனைவி சுனிதா தகவல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர் களிடம் சுனிதா கூறுகையில், “இரண்டு நாட்களுக்கு முன்பு  அரவிந்த் கெஜ்ரிவால் தில்லியின்  தண்ணீர் மற்றும் கழிவுநீர் பிரச்  சனை தொடர்பாக நீர்வளத்துறை  அமைச்சர் அதிஷிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் ஒன் றிய அரசு அதிஷிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளது. பாஜக தில்லியை அழிக்க நினைக்கிறார்களா? மக்கள் தொடர்ந்து துன்பத்தில் தவிக்க  வேண்டும் என்று விரும்புகிறார் களா என்ன? மதுபான கொள்கை யில் ஊழல் நடந்ததாகத் தொட ரப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறை சுமார் 250-க்கும் அதிக மான சோதனைகளை நடத்தி யுள்ளது. 

ஊழல் எனச் சொல்லி அவர்  கள் பணத்தைத் தேடி வரு கின்றனர். ஆனால் இதுவரை எதையும் கண்டுபிடிக்கவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 28  அன்று நீதிமன்றத்தில் அனைத் தையும் வெளிப்படுத்துவேன் என்று தெரிவித்தார். மதுபான ஊழல் வழக்கின் பணம் எங்கே  சென்றது என்பதைத் தெரிவிப்  பார். அனைத்து ஆதாரங்களை யும் அவர் அளிப்பார்” என சுனிதா  கெஜ்ரிவால் பேசினார்.

கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் வியாழனன்று நிறைவு பெறும் நிலையில், அன்றைய  தினமே தில்லி நீதிமன்றமும் விசா ரணை நடத்த உள்ளது. இத னால் கெஜ்ரிவாலுக்கு மேற்  கொண்டு காவல் நீட்டிக்கப் படுமா? இல்லை ஜாமீன் தரப்  படுமா? என பல்வேறு எதிர் பார்ப்புகள் கிளம்பியுள்ளது.

அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்
அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் எனக்  கூறி கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு தில்லி நீதிமன்றத்தில் புத னன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதி பதி ஸ்வர்ண காந்த சர்மா, கெஜ்ரி வால் கைது தொடர்பாக பதில ளிக்க வேண்டும் என அமலாக்கத்  துறைக்கு நோட்டிஸ் அனுப்ப உத்  தரவிட்டார். 

தில்லி சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி போராட்டம்
புதனன்று கெஜ்ரிவால் கைதை கண்டித்து தில்லி சட்ட மன்றத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக் கள் போராட்டம் நடத்தினர். மஞ்  சள் நிற டி-சர்ட் மற்றும் கெஜ்ரி வாலின் முகமூடியை அணிந்து போராட்டம் நடத்திய ஆத் ஆத்மி எம்எல்ஏக்கள், மோடி அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பியதால் அவை நடவ டிக்கைகள் 15 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டன.

கெஜ்ரிவாலுக்கு உடல்நலக் குறைவு

அமலாக்கத்துறை காவலில் உள்ள தில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக என ஆம் ஆத்மி கட்சி தகவல் 
தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு ஏற்ற இறக்கத்துடன் காணப் 
படுகிறது. அவரது உடல்நிலை சீரற்ற நிலையில் உள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.