புதுதில்லி, டிச. 27- கற்பித்தல் பணிக்கு தகுதி யானது இல்லை என்பதால் 2022-23 கல்வியாண்டில் இருந்து எம்ஃபில் (M.Phil) படிப்பு நீக்கப்படுகிறது என்றும், இனிமேல் இந்த படிப்பில் மாணவர்கள் சேர வேண்டாம் என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) மீண்டும் அறிவித்துள்ளது.
எம்ஃபில் படிப்புகளை நிறுத்தப் போவதாக 2022-ஆம் ஆண்டிலேயே யுஜிசி தெரிவித்த பொழுதிலும் சில பல்கலைக்கழகங்கள் அந்த படிப்புக்கு மாணவர்களை சேர்த்து வருவதாக தகவல் வெளியானதால் யுஜிசி மீண்டும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்லூரிகளுக்கு எச்சரிக்கை சுற்றறிக்கை விடுக்கலாமே?
சில பல்கலைக்கழகங்கள் எம்ஃபில் படிப்புக்கு மாணவர்களை சேர்த்து வருவதாக தகவல் வெளியானதாக பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாணவர்களுக்கு ஓராண்டு கழித்து மீண்டும் எச்சரிக்கை விடுப்பதற்கு பதிலாக எம்ஃபில் படிப்புக்கு மாண வர்களை சேர்த்து வரும் கல்லூரி கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க லாம், அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் எம்ஃபில் படிப்பு தொடர்பாக எச்சரிக்கை சுற்றறிக்கை விடுக்கலாம். அவ்வாறு செய்தால் மாணவர்கள் எவ்வித குழப்பம் இல்லாமல், இந்தியாவில் எம்ஃபில் படிப்பே இல்லை என வேறு படிப்பை தேர்வு செய்வார்கள். இதனை செயல்படுத்தாமல் மாண வர்களை மட்டுமே எச்சரிப்பது தவறான நடவடிக்கையாகும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவிக் கின்றனர்.