india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வயநாட்டில் உள்ள சூச்சிபாரா அருவிக்கு (Soochipara Waterfalls) அருகில் வனத் துறையினர் நடத்திய சோதனையில்,4 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உடல்களை மீட்ட ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் அவற்றை பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

“ஆப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக பழங்குடி யினர் அதிகம் வாழும் நாடு இந்தியா. நாடு  சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகியும் பழங் குடியினர் இன்னும் பின்தங்கியே உள்ளனர். நீங்கள் அனைத்து துறைகளிலும் முன்னோக்கி இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்” என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார்.

ஒன்றிய அமைச்சரவை செயலாளராகத் தமிழ் ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோம நாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 30 முதல் அடுத்த 2 ஆண்டுகளுக்குப் பதவி வகிப் பார். தமிழ்நாட்டில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது செயலாளராக பணியாற்றியவர் டி.வி.சோமநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

“தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம் ரத்து செய்யப் பட்டதையடுத்து, அதற்கென புதிய சட் டத்தை இயற்றும் எண்ணமில்லை” என ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

கல்பெட்டா

ஒன்றிய அரசின் குழுவினரும் ஆய்வு

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை ஒன்றிய உள்துறை இணைச் செயலரும், அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழுத் தலைவருமான ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.

மாநில அமைச்சர் பி.ஏ. முஹம்மது ரியாஸ் தலைமையிலான அமைச்சர வை உபகுழு உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் ஆகியோரு டன் கலந்துரையாடலும் நடத்தினர். அவர்களிடம் பேரிடர் நடந்த நாள் முதலான மீட்பு பணிகள், தேடுதல், நிவாரண முகாம்கள், உடற்கூராய்வு, உறவினர்க ளிடம் ஒப்படைப்பு, நல்லடக்கம், டிஎன்ஏ  பரிசோதனை, இறந்தோர் மற்றும் காணா மல் போனோர் பட்டியல் உள்ளிட்ட வற்றை ஆட்சியர் டி.ஆர். மேகாஸ்ரீ விளக்கினார். 

மறுவாழ்வுக்கு மட்டும் ரூ. 2 ஆயிரம் கோடி வேண்டும்

பேரிடர் ஏற்பட காரணமான சூழல் குறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் செயலாளர் டாக்டர். சேகர் எல் குரியகோஸ் விளக்கி னார். குடியிருப்புப் பகுதியிலும், தோட்டப்  பகுதியிலும் இழப்பு அதிகம் என்றும், மறுவாழ்வுக்கு மட்டும் 2000 கோடி ரூபாய் தேவை என்றும் மத்தியக் குழுவி டம் மாநில அரசு தெரிவித்தது.

அதன் முடிவில், தற்போது கிடைத் துள்ள தகவலின்படி, வயநாடு நிலச் சரிவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளதாகவும், இதில் கூடுதலாக நிபுணர் ஆய்வு தேவை என்று மத்தியக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.