india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழ்நாட்டைப் போலவே காங்கிரஸ் ஆளும்  கர்நாடகாவிலும் அனைத்து அரசு பள்ளிகளி லும் “அன்னபூர்ணா” என்ற பெயரில் காலை சத்து ணவு திட்டம் திங்களன்று தொடங்கப்பட்டது.

சந்தேஷ்காளி வழக்கில் தொடர்புடைய திரிணா முல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விரைவில் ஆஜர்படுத்த வேண்டும் என மேற்குவங்க காவல்துறைக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் கார்  மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளான தில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.

தில்லி கலால் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மக்களவை தேர்தல் நெருங்கியுள்ளதால் பாஜக தீவிரமாக ஆள்பிடி வேலையில் கள மிறங்கியுள்ள நிலையில், ஜார்க்கண்டின் சிங்பும் (எஸ்டி) தொகுதியின் காங்கிரஸ் எம்பி கீதா கோரா  திங்களன்று பாஜகவில் இணைந்தார்.

பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநில சட்ட மன்றத்தில் 5 நாள் பட்ஜெட் கூட்டத்தொடர்  திங்களன்று தொடங்கியது.

தில்லி துக்ளக் லேனில் உள்ள தோபி காட் பகுதி யில் தெருநாய்கள் கடித்து கொல்லப்பட்ட 2 வயது சிறுமியின் குடும்பத்தினரை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திங்களன்று நேரில்  சந்தித்து, ஆறுதல் கூறி நிவாரணம் அளித்தார்.

நாகாலாந்து சட்டமன்றத்தின் புதிய துணை சபாநாயகராக தேசியவாத காங்கிரஸ் கட்சி யின் (அஜித்) எம்எல்ஏ எஸ்.டோய்ஹோ யெப் தோமி திங்களன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜார்க்கண்ட் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதிக்கக் கோரிய முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, ஜார்க் கண்ட் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஹேமந்த் சோரன் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தை நாடிய  பொழுது, அவரது கோரிக்கையை சிறப்பு நீதி மன்றம் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுதில்லி
அமலாக்கத்துறையின் 7-வது சம்மனையும் புறக்கணித்த கெஜ்ரிவால்

மக்களவைத் தேர்தலுக்கு முன் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த்  கெஜ்ரிவாலை மதுபான கலால் கொள்கை வழக்கு மூலம் சிறையில் அடைக்க மோடி  அரசு துடியாய்த் துடித்து வருகிறது. இதன்  வெளிப்பாடாக கலால் கொள்கை வழக்கு  தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்  துறை தொடர் சம்மனை அனுப்பி வரும்  நிலையில், சம்மன்கள் அனைத்தும் சட்ட விரோதமானது எனக் கூறி, 6 சம்மனையும்  கெஜ்ரிவால் புறக்கணித்தார். 

இந்நிலையில், கடந்த வாரம் 7-ஆவது  முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்  கத்துறை, பிப்ரவரி 26-ஆம் தேதி கெஜ்ரி வால் ஆஜராக சம்மனில் உத்தரவிட்டு இருந்தது. வழக்கு நீதிமன்றத்தில் உள்ள தால் அமலாக்கத்துறை சட்ட நடைமுறை களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று  கூறி 7-ஆவது சம்மனையும் கெஜ்ரிவால் புறக்கணித்தார். 

புதுதில்லி
“அக்னிபாதை” திட்டத்தை ரத்து செய்வோம்: காங்.

கடந்த 2022இல் மோடி அரசு பழைய  ராணுவ ஆட்சேர்ப்பு முறையை நீக்கி, “அக்னிபாதை” என்ற பெய ரில் வெறும் 4 ஆண்டுகால ராணுவப்பணி  வேலையை அமல்படுத்தியது. 4 ஆண்டு பணி முடிந்தவுடன் அக்னிபாதையில் பணி யாற்றிய ராணுவ வீரர்கள் பணியிலிருந்து  வெளியேற வேண்டும். ஓய்வூதியம் உள்  ளிட்ட எந்த பலனும், மாற்று வேலைக்கான  உறுதியான உத்தரவாதமும் கிடைக்காது  என்ற நிலையில், மோடி அரசின் சூழ்ச்சி  கலந்த இந்த “அக்னிபாதை” திட்டத்திற்கு  எதிராக பல்வேறு போராட்டங்கள் நடை பெற்றாலும் தற்போது வரை அக்னிபாதை  மூலமே ராணுவ ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டு  வருகிறது.

இந்நிலையில், “அக்னிபாதை” திட் டத்தின் காரணமாக ஆயுதப்படைகளில் வழக்கமான வேலை தேடும் இளைஞர்  களுக்கு இழைக்கப்பட்ட மோசமான அநீதியை சுட்டிக்காட்டி, இந்த திட்டத்தை  ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்க ளன்று ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

கடிதத்தில்,”ஆயுதப்படைகளில் வழக்கமான ஆட்சேர்ப்பு செயல்முறை ரத்து செய்யப்பட்டதால் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் இளைஞர்கள் மற்றும்  பெண்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாகி விட்டது. இதனால் இந்திய ஆயுதப்படை களின் உச்ச தளபதியாக இருக்கும் ஜனா திபதி நீதி வழங்க வேண்டும்” எனக் கூறப்  பட்டுள்ளது.

“அக்னிபாதை”யை  ரத்து செய்வோம்!
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்  தால் “அக்னிபாதை” திட்டம் ரத்து செய்  யப்பட்டு, பழைய ஆட்சேர்ப்பு திட்டத்தை  அமல்படுத்துவோம் என காங்கிரஸ் கட்சி  தேர்தல் அறிக்கை அறிவிப்பின் ஒரு பகுதி யாக தற்போதே அறிவித்துள்ளது.

லக்னோ
ஞானவாபி மசூதி
மேல்முறையீடு மனு தள்ளுபடி

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி யின் சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ளது ஞானவாபி மசூதி  17-ஆம் நுாற்றாண்டில் முகலாய மன்னர்  ஒளரங்கசீப், காசி விஸ்வநாதர் கோவிலை இடித்துவிட்டு அதன்மீது மசூதி கட்டிய தாகவும், மசூதி வளாகத்தில் இந்துக்கள்  வழிபட அனுமதிக்கக் கோரியும் வழக்கு  தொடரப்பட்டது.இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து மசூதி வளாகத்தில்  இந்து கடவுள்களின் சிலைகள் இருப்ப தாக அறிக்கை வெளியிட, கடந்த மாதம்  வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி  அளித்தது. தற்போது மசூதி பாதாள  அறைகளில் இந்துமத வழிபாடு நடை பெற்று வரும் நிலையில், இதை எதிர்த்து  மசூதி நிர்வாகம் சார்பில் அலகாபாத் உயர்  நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  இந்த வழக்கு திங்களன்று விசாரணைக்கு  வந்த நிலையில், மசூதி நிர்வாகத்தின்  மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்  டது அலகாபாத் உயர்நீதிமன்றம்.