மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா வின் மூத்த மகனும் எம்எல்ஏவுமான எச்.டி.ரேவண்ணா வின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா எம்பி தனது அதிகாரம் மூல மும், மிரட்டல் விடுத் தும் 300 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக 3000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக் கள் அடங்கிய தொகுப்பு வெளியானவுடன் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார். இந்த வழக்கை கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு (சிஐடி) விசாரணை செய்து வரும் நிலையில், பிரிஜ்வல் ரேவண்ணாவை போலவே அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் புகார் அளிக்கப்பட்டுள் ளது. இரண்டு பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவும், எச்.டி.ரேவண்ணாவும் விசா ரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கர்நாடகா எஸ்ஐடி அவர்களது வீடுகளில் நோட்டீஸ் ஒட்டியது.
பிரஜ்வலின் கோரிக்கை நிராகரிப்பு
தனது வீட்டில் கர்நாடகா எஸ்ஐடி போலீ சார் நோட்டீஸ் அனுப்பியதும் பிரஜ்வல் ரேவண்ணா,”நான் பெங்களூருவில் இல்லை என்பதால் நான் விசாரணைக்கு ஆஜராக முடி யாது. எனது வழக்கறிஞர் மூலமாக பெங்க ளூரு எஸ்ஐடி போலீசாரிடம் ஒரு வாரம் அவ காசம் கேட்டிருக்கிறேன். உண்மை விரை வில் வெல்லும்” என டுவிட்டர் எக்ஸ் மூலம் அவகாசம் கேட்டுள்ளார்.
பிரஜ்வலின் இந்த கோரிக்கையை கர் நாடகா எஸ்ஐடி போலீசார் நிராகரித்துள்ள நிலையில், ஜெர்மனியில் உள்ள அவரை கைது செய்ய வேண்டியதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை துவங்கியுள்ளனர். இந்த நடவடிக்கையின் முதல்கட்டமாக பிரஜ் வல் ரேவண்ணாவுக்கு எதிராக கர்நாடகா எஸ்ஐடி தரப்பில் லுக் அவுட் நோட்டீஸ் (தேடும் குற்றவாளி) வெளியிட்டுள்ளது. பிரஜ் வல் ரேவண்ணா விவகாரத்தில் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட் டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் உள்ள எந்த விமான நிலையத்திற்கு வந்தாலும் பிரஜ்வல் கைது செய்யப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒரு வழக்கு
பாலியல் வன்முறை வழக்கில் சிக்கிய பாஜக கூட்டணி கட்சி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரி வித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,”பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக தற்போது வரை 2 பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில், மேலும் ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களிடம் சிறப்பு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று அவர் கூறினார்.