புதுதில்லி, ஜூன் 28 - நீட் தேர்வு ஊழல் விவகாரத்தை நாடாளு மன்றத்தில் எழுப்புவது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இல்லத்தில் வியாழனன்று மாலை இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஆலோ சனை நடத்தினர். ஆலோசனையின் முடிவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதம் நடத்த வலி யுறுத்தி ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர “இந்தியா” கூட்டணி சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளியன்று இரு அவை களும் கூடியதும் இந்தியா கூட்டணி சார்பில் அவைத் தலைவர்களிடம் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ்கள் அறிவிக்கப் பட்டன.
மக்களவை
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒத்தி வைப்பு தீர்மானத்துக்கான கோரிக்கையை முன் வைத்து,”நீட் தேர்வு முறைகேட்டால் பல லட்சம் மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே நீட் தேர்வு சர்ச்சை குறித்து இந்த அவை யில் ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட வேண் டும்” என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் சபாநாயகர் ஓம் பிர்லா இந்தக் கோரிக்கையை நிரா கரித்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான த்திற்கு அழைப்பு விடுத்தார். இதனால் இந்தியா கூட் டணி எம்.பி.க்கள் “நீட்”, “நீட்” என தொடர் முழக்கங்களை எழுப்பி வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இத னால் மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப் பட்டது. மீண்டும் 12 மணிக்கு அவை தொடங்கிய பொழுது இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நீட் தேர்வுக்கு எதி ராக முழக்கங்களை எழுப்பி னர். இதனால் திங்கள்கிழ மை (ஜூலை 1) வரை மக்களவை ஒத்திவைப்ப தாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
மாநிலங்களவை
மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்வைத் தார். ஆனால் மாநிலங் களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் “இந்தியா” கூட்ட ணியின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். இதனால் “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் முழக்கங்களுடன் வலுவான எதிர்ப்பை வெளிப் படுத்தியதால் மதியம் 2 மணிவரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடிய பின்னரும் “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் நீட் குறித்து விவா திக்க வேண்டும் என அமளி யில் ஈடுபட்டனர். இதனால் நாள்முழுவதும் அவை ஒத்தி வைக்கப்படுவதாகவும் மீண்டும் திங்கள்கிழமை (ஜுலை 1) அவை கூடும் எனவும் மாநிலங்களவைத் தலைவர் அறிவித்தார்.
மயங்கி விழுந்த பெண் எம்.பி.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மாநிலங் களவையில் விவாதிக்க இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி னர்.
அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகை யிட்டு அமளியில் ஈடுபட்ட பொழுது காங்கிரஸ் எம்.பி. பூலோ தேவி நேதம் திடீ ரென மயங்கி விழுந்தார். நாடாளுமன்ற வாசலில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.