பெங்களூரு
17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்
பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ பாய்ந்தது
கர்நாடக முன்னாள் முதல்வரும், மூத்த பாஜக தலைவருமான 81 வயதான பி.எஸ்.எடியூரப்பா மீது பாலியல் வன்கொடுமை புகார் எழுந்துள்ளது. இதனால் அவர் மீது போக்சோ உட்பட 2 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
நடந்தது என்ன?
கடந்த பிப்ரவரி 2 அன்று பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள பி.எஸ்.எடியூரப்பா வின் வீட்டிற்கு மோசடி வழக்கு தொடர்பாக சந்திக்க பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் சென்றுள்ளார். அப்பொழுது தனது மகளை எடியூரப்பா தனியாக அவ ரது அறைக்கு அழைத்துச் சென்றதாகவும், அறைக்குள் சிறுமி என்று கூட பாராமல் எடியூரப்பா பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் சிறுமியின் தயார் காவல்துறையில் புகார் அளித்துள் ளார். இதனால் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் பிரிவு 8 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354ஏ ஆகியவற்றின் கீழ் கர்நாடக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். முக்கியமாக அவர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிர்ச்சியில் பாஜக
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள பி.எஸ்.எடியூரப்பா 4 முறை கர்நாடக முதல்வராகவும், 3 முறை எதிர்கட்சித் தலைவராகவும் இருந்துள் ளார். முக்கியமாக பி.எஸ்.எடியூரப்பா கர்நாடக மாநிலத்தில் மட்டுமின்றி தென் இந்திய பாஜகவின் முக்கிய தலைவராகவும் கருதப்படுகிறார். இதுபோக பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா கர்நாடக பாஜக தலை வராக உள்ள சூழலில் 81 வயதாகும் பி.எஸ்.எடியூரப்பா 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படும் சம்பவம் பாஜகவிற்கு கடும் அதிர்ச்சியையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.