இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 98 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகின் 180க்கு மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இந்த நோய் தொற்றால் இதுவரை 2,83,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; பலி எண்ணிக்கை 11,839 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சீனாவில் 81,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 3,255 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் 47,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 4,032 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் 20,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,556 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் 24,926 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,326 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 98 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 5 (4 இந்தியர்கள், 1 வெளிநாட்டவர்) ஆக உள்ளது. 22 பேர் குணமடைந்துள்ளனர்.