india

img

5 ஆண்டுகளில் மட்டும் 819 வீரர்கள் தற்கொலை!  

தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 819 வீரர்கள் தற்கொலை செய்துள்ளதாக பாதுகாப்பு இணையமைச்சர் அஜய் பட் மாநிலங்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.  

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட், கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 819 ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும், அதிகபட்சமாக ராணுவத்தில் இதுதொடர்பாக 642 வழக்குகள் பதிவாகியிருப்பதாகவும் ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடற்படையில் 29 பேரும், விமானப்படையில் 148 பேரும் தற்கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, நாட்டுக்கு சேவை செய்யும் வீரர்கள் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளால் இத்தகைய விபரீத முடிவுகளுக்கு தள்ளப்படுகின்றனர். அதனால் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.  

இதற்கான விரிவான மனநலத் திட்டம் உருவாக்கப்பட்டு 2009 முதல் நடைமுறையிலிருக்கிறது. விடுமுறைக்குப்பிறகு பிரிவுகளுக்கு திரும்பும் அனைத்து பணியாளர்களும் ரெஜிமென்ட் மருத்துவ அதிகாரிகளால் நேர்காணல், ஆலோசனை மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துகிறார்கள் என்று அவர் கூறினார். 

;